Headlines

ad34@hFacMC

பின் லேடனை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்த வழக்கறிஞர் சுட்டுக் கொலை

பின் லேடன் இருப்பிடம் குறித்து சி.ஐ.ஏ-வுக்கு காட்டிக் கொடுத்த ஷாகில் அஃப்ரிதியின் வழக்கறிஞர் சமயுல்லா அஃப்ரிதி சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் சென்று கொண்டிருந்த சமயுல்லா அஃப்ரிதியின் கார் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக டான் செய்தி சேனலில் ஆன்லைன் பதிப்பு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு தலிபான் இயக்கத்தின் இருவேறு கிளைகள் பொறுப்பேற்றுள்ளன. கடந்த 2013-ல், தொடர்ந்து வந்த அச்சுறுத்தலால் பாகிஸ்தானிலிருந்து தப்பித்து சென்ற சமயுல்லா அஃப்ரிதி சமீபத்தில் நாடு…

Read More

பொதுபல சேனாவின் நடவடிக்கையால்தான் மஹிந்த ஆட்சி கவிழ்ந்தது: யோகராஜன்

பொதுபல சேனாவின் நடவடிக்கைகளால்தான் சர்வதேசத்தின் ஆதரவை இழந்தோம் என்பது மட்டுமல்ல பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் கவிழ்ந்தது என ஆர். யோகராஜன் எம்.பி. நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபைச்சட்டத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே ஆர். யோகராஜான் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவு வழங்க உறுதியளித்து இறுதி நேரத்தில் பல நாடுகள்…

Read More

சிங்கப்பூரை நிறுவிய லீ க்வான் கவலைக்கிடம்

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 91 வய தாகும் லீ, உடல்நலம் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். 1965ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை யடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, அந்நாட்டின் முதல் பிரதமரானார்.

Read More

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அமைச்சர் றிஷாத் சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தூதுவர் டேவிட் டாலிக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றது. இச் சந்திப்பில் சமகால அரசியல் நகர்வுகள், தேர்தல் முறைமை மாற்றங்கள் மற்றும் புதிய அரசாங்கத்தின் வர்த்தக கொள்கைகள் போன்றவைகளை அமைச்சர் தூதுவரிடம் விளக்கினார். வர்த்தக மற்றும் முதலீட்டு மாற்றத்துடன், GSP Plus மீளப்பெறுவதற்கான தேவை, மீன் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படல் போன்றவைகளை அமைச்சர் தூதுவரிடம் முன்வைத்தார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்…

Read More

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் உடன் அமைச்சர் றிஷாத்

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் இன்று காலை இலங்கைக்கான புதிய தூதுவர் yi xianliang வரவேற்றதுடன்.சீனா அரசாங்கத்தினால் இலங்கையில் கடந்தகாலங்களில் செய்த அபிவிருத்தி உற்கட்டமைப்பு உதவிகள் அனைத்துக்கும் எமது புதிய அரசாங்கம் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதுடன்,தொடர்தும் அபிவிருத்திக்கு ஒத்தழைப்புகளை வழங்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய தூதுவர் நான் உற்பட சீனா அரசாங்கம் ஆகியன புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்து நற்புறவுடன் செயற்பட ஆர்வமாக உள்ளதுடன்,புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைக்கவும் முதலீடு செய்யவும் சீனா…

Read More

மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் உலகின் மிக பெரிய விமானம்

ஸ்டிராடோ லாஞ்ச சிஸ்டம்ஸ் என்ற விண்வெளி போக்குவரத்து நிறுவனம் ஒன்று உலகின் மிக பெரிய விமானத்தை தயாரித்து வருகிறது . “ராக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 385 அடி விங்க்ச்பான் கொண்டுள்ளது. இந்த விமானம் பெரிய பெரிய ராக்கெட்டுகளை சுமந்து சென்று , புவி சுற்றுவட்டப் பாதையில் கொண்டு சேர்க்கிறது. மேலும் மனிதர்களையும் விண்வெளிக்கு கொண்டு செல்கிறது. இவ்விமானம் 2016 -ல் சோதனை செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

மருந்துகளை கொடுத்து 35 நாட்களில் ராட்சத சிக்கனாக மாறும் KFC சிக்கன் – அதிர்ச்சியூட்டும் தகவல்

உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். . இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும் “அலி”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும். பின்னர் அதனை வெட்டி பார்சல்…

Read More

இஸ்ரேலில் பாராளுமன்ற தேர்தல்: நேதன்யாகு கட்சி வெற்றி

120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியும், இசாக் ஹெர்ஷோக்கின் மத்திய இடது ஷிபோனிஸ்ட் ஐக்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தற்போது 99.5 சதவீதம் ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது. அதில் நேதன்யாகுவின் லிகுட் கட்சி முன்னணியில் உள்ளது. இக்கட்சி 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் பல தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. எனவே,…

Read More

தந்தை கூறிய ஐ லவ் யூ வார்த்தையை அவருக்கு திருப்பி கூறிய 7 வார பெண் குழந்தை

லண்டனின் வட மேற்கு பகுதியில் உள்ள கில்பர்னில் வசித்து வரும் அலி சுபி என்கிற 25 வயது இளைஞருக்கு கடந்த 7 வாரங்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தையும் தெய்வ குழந்தையோ என எண்ண தோன்றுகிறது. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு வருடத்திற்கு பிறகு தான் பேச ஆரம்பிக்கும் என்பது தெரிந்த கதை தான். ஆனால் சுபியின் குழந்தையோ, ஏழே வாரத்தில் ஐ லவ் யூ எனக் கூறி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நாள்…

Read More

வாட்ஸ் அப்பில் வாலிபர் அவமதிப்பு: சவுதிஅரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை

‘வாட்ஸ் அப்’பில் வாலிபரை அவமதித்த சவுதி அரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது. சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் ‘வாட்ஸ் அப்’பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும். எனவே, அப்பெண் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு ரூ.3 லட்சத்து 28…

Read More

இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம்!

இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான வாக்­கெ­டுப்பு நேற்றுச் செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­னது இத்­தேர்­தலில் பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்­டான்­யா­ஹுவின் கட்­சிக்கும் மத்­திய இடது சாரி கூட்­ட­மைப்பு கட்­சிக்கும் கடும் ­போட்டி நிலவுதாகக் கூறப்படுகிறது. மத்­திய இடது சாரி கூட்­ட­மைப்­பா­னது பலஸ்­தீனம் மற்றும் சர்­வ­தேச சமூ­கத்­து­ட­னான உற­வு­களை மறு­சீ­ர­மைப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது.பிந்­திய கருத்­துக்­க­ணிப்பு வாக்­கெ­டுப்­புகள் நெட்­டான்­யா­ஹுவின் கட்­சியை விடவும் இடதுசாரி கூட்­ட­மைப்பு 3 முதல் 4 ஆச­னங்­களை கூடு­த­லாக பெறும் வாய்ப்­புள்­ள­தாக தெரி­விக்­கின்­றன. தான் நான்­கா­வது தட­வை­யாக வெற்­றி­பெறும் பட்­சத்தில் பலஸ்­தீ­னத்தின் உரு­வாக்­கத்­திற்கு அனு­ம­திக்கப் போவ­தில்லை…

Read More

வாகன விபத்தில் இருவர் பலி

கிளிநொச்சி – தர்மகேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மரக்கறி ஏற்றி வந்த லொறி ஒன்று வேகத்தைக் கட்டுப்பாடுத்த முடியாமலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் விபத்து தொர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More