தேசிய கீதத்தை தமிழ், அரபு, ஆங்கில மொழிகளில் இசைத்தால் போதுமானது: பொதுபல சேனா
எம்.எம் மின்ஹாஜ் நாட்டில் நல்லாட்சி நிலவுவதனால் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டியதில்லை. தமிழ், அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் இசைத்தால் போதுமானது. இவ்வாறு சென்றால் தேசிய கொடியில் சிங்கத்தை அகற்றுமாறும் கோருவர். இதற்கு எதிர்ப்பு வெளியிட்டால் எம்மை இனவாதிகள் என்பார்கள் என பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். உலகில் எங்கும் இல்லாத நல்லாட்சி இலங்கையில் நிகழ்கின்றமை நகைப்புக்குரியது. இந்த நல்லாட்சியில் சிறுப்பான்மையினருக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர்…
