Headlines

ad34@hFacMC

தேசிய கீதத்தை தமிழ், அரபு, ஆங்கில மொழிகளில் இசைத்தால் போதுமானது: பொதுபல சேனா

எம்.எம் மின்ஹாஜ் நாட்டில் நல்­லாட்சி நில­வு­வ­தனால் தேசிய கீதத்தை சிங்­கள மொழியில் பாட­வேண்­டி­ய­தில்லை. தமிழ், அரபு மற்றும் ஆங்­கில மொழி­களில் மாத்­திரம் இசைத்தால் போது­மா­னது. இவ்­வாறு சென்றால் தேசிய கொடியில் சிங்­கத்தை அகற்­று­மாறும் கோருவர். இதற்கு எதிர்ப்பு வெளி­யிட்டால் எம்மை இன­வா­திகள் என்­பார்கள் என பொது பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். உலகில் எங்கும் இல்­லாத நல்­லாட்சி இலங்­கையில் நிகழ்­கின்­றமை நகைப்­புக்­கு­ரி­யது. இந்த நல்­லாட்­சியில் சிறுப்­பான்­மை­யி­ன­ருக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர்…

Read More

மஹிந்தவுக்கு 21 வாகனங்கள் 213 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் : எனினும் பாதுகாப்பு இல்லை என்கின்றார்

 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு 21 வாக­னங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் 213 பாது­காப்பு உத்தி­யோ­கத்­தர்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு வச­தி­களை வைத்­துக்­கொண்டு அவர் தனக்கு பாது­காப்பு இல்லை என்று கூறு­கின்றார் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். இந்­நி­லையில் 2007 ஆம் ஆண்டு வழங்­கப்­பட்­டுள்ள உயர்­நீ­தி­மன்ற தீர்ப்பின் பிர­காரம் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்­கான வாக­னங்­க­ளையும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் குறைக்­க­வேண்­டிய நிலையும் ஏற்­ப­டலாம் என்றும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை…

Read More

இங்கிலாந்துக்கு காத்து இருக்கிறது, மிகப் பெரிய ஆபத்து

இங்கிலாந்து பாராளுமன்ற குழு, காசநோய் தாக்கம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை அந்த நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கொடிய காசநோய் பரவ இருக்கிறது என்றும், இன்னும் 35 ஆண்டுகளில் இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 7 கோடியே 50 லட்சம் பேர் பலியாகலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய் தாக்கம் காரணமாக உலகின் பொருளாதாரம் ஒரு சதவீதம் அதாவது, ஐரோப்பிய நாடுகளின் ஒரு ஆண்டு உற்பத்தி அளவுக்கு…

Read More

வீடு வாங்கிய செய்தி.. கோத்தாபய ராஜபக்ஷவிடம் ரூ. 2000 கோடி நட்டஈடு

தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி இருவேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் வெளிப்படுத்திய குற்றச்சாட்டிற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடமும் ‘லங்கா’ பத்திரிகையிடமும் தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடான கோரிக்கை கடிதங்களை நேற்று அனுப்பு வைத்தார். அரசியலில் பழிவாங்கும் நோக்கில் தனிநபர் பெயரை கலங்கப்படுத்த முன்னால் பாதுகாப்புச் செயலாளரும் ‘லங்கா’ பத்திரிகை நிறுவனமும் மேற்கொண்ட முயற்சிகள் தவறானவை என்பதனாலேயே தான் இந்த தீர்மானத்தை…

Read More

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சவால்

தேசிய அரசாங்கத்தை விமர்சித்து மக்களை திசை திருப்ப சில அரசியல் அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். அரசியல் சுயநலத்தில் நாட்டைக் காவு கொடுக்க நாம் தயாரில்லை என தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் தலைவராக்க மக்கள் விரும்பவில்லை. முடிந்தால் மஹிந்த ராஜபக் ஷ பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்டட்டும் எனவும் சவால் விடுத்தார். ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க…

Read More

கட்டார் அமீருடன் இலங்கை செய்த ஒப்பந்தங்களின் விபரம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு கட்டார் அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று அந்நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த கட்டார் நாட்டு அமீர் இலங்கையில் மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருந்ததுடன் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர் நாடு திரும்பினார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் ஆகியோருக் கிடையில் விசேட சந்திப்பு…

Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு

நாவலப்பிட்டியிலிருந்து நானூஓயா வரை சென்ற எரிபொருள் மற்றும் பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் தடம் புரண்டுள்ளது. அதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தள்ளனா்வட்டவளை மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில் 102 1/4 கட்டைப்பகுதியில்  (24.03.2015) மாலை 4.10 மணியளவில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

Read More

கண்டெடுக்கப் பட்ட பொருளின் நிலை என்ன?

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் மார்க்கம் சகல விடயங்களுக்கும் தீர்வு சொல்லியுள்ளது. அந்த வரிசையில் பாதையில் பிறரின் பொருளை கண்டெடுத்தால் அதை என்ன செய்வது என்பதை தொடர்ந்து அவதானிப்போம். ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, கண்டெருக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப்…

Read More

சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறமுடியும்

‘தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வர முடியாது. இது நீண்ட காலமாகவுள்ள நடைமுறை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக சிறுபான்மையினர் ஒருவர் வருவதையும் சிலர் விரும்பவில்லை. நாம் ஒன்றுபட்டு சிறுபான்மையினர் ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்போம்’ என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். திருகோணமலை, கிண்ணியா மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் நேற்றுக் காலை (24) திறந்து வைத்தார். அமைச்சருடன்…

Read More

உலகில் விலை உயர்ந்த ஆடம்பர தங்க கார்: இலங்கை பெறுமதி 98 கோடி..!

ஆடம்பரத்துக்கு பெயர்போன டுபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, அதை வீதியில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர். வெளிப்புறத்தில் தங்கத்தகடு, வைரக்கற்களுடன் கூடிய முகப்பு விளக்குகள், உள் இருக்கை மற்றும் மேற்கூரையில் தங்க இழைகளில் நவரத்தின கற்களின் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய இந்த காரின் கண்ணாடிகள் அனைத்தும் குண்டுகளால் துளைக்க இயலாதவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ஆம் ஆண்டு டுபாய் கார் கண்காட்சியில் இடம்பெற்ற இந்த ‘லம்போர்கினி…

Read More

ஜனாதிபதி இன்று சீனா விஜயம்!

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) சீனா செல்லவுள்ளார். இவ்விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங் உட்பட பல சீன அரச பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன அரசினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இரு அரச தலைவர்களும் கவனம் செலுத்தவுள்ளனர்.

Read More

19ஆம் திருத்தச்சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நேற்று சமர்ப்பித்தார். இதன்படி, ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. அதேநேரம், ஆறு வருடகாலமாக இருந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தத்துவங்கள், கடமைகள், பணிகள் என்ற உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக இருக்க வேண்டும். மதம் சார், இனம் சார், ஒற்றுமை பேணப்படுதலை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய நல்லிணக்கம் மற்றும்…

Read More