Headlines

ad34@hFacMC

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால  எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, அக்கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.சாய்ந்தமருது பிரதேசத்தை தனி  உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல், அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நேற்று திங்கட்கிழமை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமைலான…

Read More

மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகமாக தொடர்ந்தும் சுபைதீன் அவர்கள் செயற்படலாம் – நீதிமன்றம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்தீன், செயலாளர் நாயகமாக இயங்குவதற்கு தடையுத்தரவு கோரி முன்னாள் செயலாளர் நாயகத்தினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தடையுத்தரவை வழங்குவதில்லையென மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று மக்கள் காங்கிரஸின் அரசியல் யாப்பு, மற்றும் சட்ட விவகார பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது, நீதிமன்ற தீர்ப்புக்கமைய செயலாளர் நாயகம் தொடர்ந்தும் தமது கடமைகளை செய்ய எந்த…

Read More

முசலிப் பிரதேச மீள்குடியேற்றங்களை சட்டவிரோதமானது என பிரகடனப்படுத்துமாறு கோரிய தடை உத்தரவு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

முசலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றங்கள் சட்டவிரோதமானதெனவும்  அவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் வன இலாக்காவுக்கு சொந்தமானது எனவும் உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியலமைப்பு, சட்டவிவகார பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். கொழும்பு புதுக்கடையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில் செயலாளர் எஸ் சுபைர்தீனும் உரையாற்றினார். சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்…

Read More

“ ஸ்ரீ விபூதிகம” மாதிரிக் கிராமம் திறப்பு விழாவில் இஷாக் ரஹ்மான்

முன்னால் ஜனாதிபதி மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச அவர்களின், தனக்கேயுரிய ஒரு வீட்டில் வாழ்வதற்கான உரிமையை பெற்றுக்கொடுக்கும் உன்னதமான உதாகம எண்ணக்கருவை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் “செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 37 வது மதிரிக்கிராமம் அநுராதபுரம் மாவட்டத்தில் நெ.நு.ப.- குடாவெவயில் நிர்மாணிக்கப்பட்ட “ ஸ்ரீ விபூதிகம” மாதிரிக் கிராமம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கெளரவ சஜித் பிரேமதாச அவர்களின் திருக்கரங்களால் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்ட…

Read More

மத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி

மத்திய முகாம் பள்ளிவாசலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்), அப்பிரதேச மையவாடிகளுக்கான விளக்குகள் மற்றும் அவற்றுக்கான உபகரணங்களை, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார். கடந்த மாதம் மத்திய முகாமுக்கு விஜயம் செய்தபோது, மத்தியமுகாம் முதலாம் வட்டாரம் நூரானியா ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினர், கலாநிதி ஜெமீலிடம் தமது தேவைகள் குறித்த கோரிக்கையை முன்வைத்தனர். அதற்கு அமைவாக பள்ளிவாசலுக்கான ஜெனரேட்டர் மற்றும் மையவாடிகளுக்கான…

Read More

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் ஆடைத் தொழிற்சாலை

கினிகத்தேனை பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் வகையில் 13.08.2017 நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் அழைப்பின் பேரில் வருகை தந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட மக்களிடம் விசேட கலந்துரையாடல் ஒன்று கினிகத்தேனை கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. அதன்பின்னர் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அம்பகமுவ பிரதேசத்தில் அம்பகமுவ கல்பொதியாய பகுதியில் சிறிய ஆடைத் தொழிற்சாலை ஒன்று அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆடைத்தொழிற்சாலையில்…

Read More

உயர் அடர்த்தி பொலித்தீன் தடை உற்பத்தியாளர்களின் சோகக்கதை

செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருக்கும் பொலித்தீன் தடையானது இலங்கையில் சில்லறை பொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் கழிவகற்றல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இலங்கையின் உயர் அடர்த்தி (HDPE) பொலீத்தின் மற்றும் மீள்சுழற்சி கைத்தொழில் உள்ளவர்கள் இத்தடைக்கு எதிராக போர் முழக்கம் செய்துள்ளார்கள். இத் தடையினால் நாடு பூராகவும் உள்ள 345,000 பேர் தமது தொழில்களை இரவோடு இரவாக இழப்பர். அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சி சங்கத்தின் [ ACPMRA] தலைவர்…

Read More

எத்தனை அம்புகள் எறிந்தாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு பணிகளை தொடருவேன் –  மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

எத்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டி அல்ஜாசிம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய ஆசிரியர் விடுதிக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டார். ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என். ஹெபிடாட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட  இந்தக் கட்டிட விழாவில் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான்…

Read More

அமைச்சர் ராஜிதவின் புத்தளம், சிலாவத்துறை விஜயம்; ஒரு வெட்டுமுகப் பார்வை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலை, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளைக் கேட்டறிந்து பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வையும் பெற்றுக்கொடுத்தார். வைத்தியசாலையின் பாரிய தேவைப்பாடுகளுக்கு ஒரு மாதகாலத்திற்குள் திட்ட வரைபு ஒன்றையும் கோரினார். கடந்த மாதம் கொழும்பில் ஜூன் 29ம் திகதி சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான…

Read More

‘முள்ளிக்குளக் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் கையளிக்கப்படவில்லை’ அமைச்சர் ரிஷாட்டிடம் கிராம மக்கள்  அங்கலாய்ப்பு

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு நடைபெறுவதாக முள்ளிக்குள கிராம மக்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் எடுத்துரைத்தனர்.  முள்ளிக்குளக் கிராம மக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிளை நிர்வாகிகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அந்த பிர தேசத்தில் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு குறைபாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்….

Read More

சுவிட்ஸர்லாந்தின் ஜிஎஸ்பி யை பயன்படுத்துவதன் மூலம்  ஏற்றுமதியினை  மேலும் விரிவுபடுத்த முடியும்!- அமைச்சர் ரிஷாட்

சுவிட்ஸர்லாந்தின் ஜிஎஸ்பி வரிசலுகையை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை தனது ஏற்றுமதியையும் மொத்த இருதரப்பு வர்த்தகத்தினையும் அதிகரிக்க முடியும் என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹின்ஸ் வாக்கர்-நெட்கரோன் தெரிவித்தார்.  கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான  சந்திப்பொன்றின் போதே அவர்  இதனை தெரிவித்தார். சுவிட்சர்லாந்து தூதுவர்  மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்: இலங்கை – சுவிட்சர்லாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஒரு வலுவான குறுகிய கால…

Read More

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது கிளை பொலன்னறுவையில் திறந்து வைப்பு.

மருதூர் ஜஹான்) கெளரவ அதிமேகு ஜனாதிபதியினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களினதும் ஆலோசனைக்கமைவாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது (09) வது பொலன்னறுவை கிளை கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான கலாநிதி ஏ. எம். ஜெமீல் அவர்களால் நேற்று 07.08.2017ம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இது…

Read More