Headlines

119 வயதிலும் நோன்பு நோற்கும் பெண்மணி !




அமெரிக்கா ஆர்கனாஸ் என்ற பகுதியில் வசிக்கும் கெர்ட்ரூட் வேவர் (117 வயது)என்ற பெண் தான் உலகில் அதிக வயதான பெண் என்று உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மலேசியாவில் கம்போங் ஜானின்,குவாலா நெராங் என்ற பகுதியில் வசிக்கும் புவான் அஹ்மது என்ற இந்த மூத்த வயோதிக பெண்ணின் வயது 119 என்று மலேசிய பதிவு இலாகாவால் வழங்கப்பட்ட ஆதாரம் கூறுகிறது.

இந்த பெண் தனது எம்புன் (90)என்ற சகோதரியுடன் வசித்து வருகிறார். இவர் இத்தனை தள்ளாத வயதிலும் நோன்பையும் மற்ற இபாதத்களையும் விட்டது கிடையாதாம். மேலும், அவருக்கு நோன்பு காலங்களில் எந்த வித நோன்பின் தாக்கமோ அசதியோ வருவதில்லையாம் மாறாக இன்னும் உற்சாகமாகவே இருப்பதாக உண்ர்வாராம்.

இவா் அதிகாலை 4மணிக்கே எழுந்து சஹர் நேரத்திற்கு தேவையானதை செய்து முடித்து சஹர் செய்து விடுவாராம். நோன்பு திறக்க வெதுவெதுப்பான சுடு தண்ணீரே அருந்துவாராம். இந்த இபாதத்களால் தான், தான் நீண்ட ஆயுளுடன் உடல் ஆரோக்கியமான நிலையில் இருப்பாதாகவும் கூறி இறைவனை புகழ்கின்றாா் இந்த மூதாட்டி . அல்ஹம்துலில்லாஹ் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *