Headlines

தேர்தல் முறை மாற்றம்; சிறுபான்மையை  பாதிக்கக் கூடாது! சோபித்த தேரர் அதிரடி




உத்தேச தேர்தல் சீர்திருத்தம்  அடங்கிய இருபதாம் சீர்திருத்தினால் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள் பாதித்து விடக்கூடாது எனவும் அதனை நிறைவேற்றுவதில் அனைவரையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை  என்றால்   பாராளுமன்றத்தினை இன்றோ அல்லது ஒருவராரத்திலோ கலைத்துவிட்டு பொது தேர்தலுக்கு செல்லுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துவெளியிட்ட அவர் எதிர்வரும் பொது தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக  தேர்தல் சீர்திருத்தை நிறைவேற்றுவதை பிரதான கட்சிகள் முன்னிறுத்தி  சிறுகட்சிகள் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படாத வகையில் நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர முன்னின்று செயற்பட்ட சோபித்த தேரர் சிறுபான்மை மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு கருத்துவெளியிட்டுள்ளமை பெரும் வரவேற்பைபாத்திரமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *