Headlines

‘விதவையான சந்திரிக்கா, மீண்டும் திருமணம் முடிக்கக்கூடாது’ – ஞானசாரர்




-ஏ எம் எம் முஸம்மில்-
பொதுபல சேனா அமைப்பின் செயலாளார் ஞானசார தேரர் 16-06-2015 ஊடக சந்திப்பில் கூறியவற்றை தொடர்ந்து கேளுங்கள்..
பண்டாரநாயக்கர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்களில்லை. இவர்கள் இந்திய வம்சாவளியை கொண்டவர்கள் (PRONOUNCE AS PANDARA NAYAGAM – NOT BANDARA NAYAKA ). இந்த பண்டார நாயக்கர்கள் சுமார் மூன்று பரம்பரைகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தார்கள்.
இவர்கள் தமிழர்கள். அதனால்தான், நாங்கள் பிரபாகரனுக்கு ஏதாவது சொன்னால் சந்திரிக்காவுக்கு கோபம் வருகின்றது. ஆகவேதான், நங்கள் சொன்னோம் இவர் பிரபாகரனின் மூத்த சகோதரி என்று. இவர்கள் எப்பொழுதும் ஹைப்ரிட் வளவ் காரர்களாக இருந்து கொண்டு வெள்ளையர்களுக்கு வால்பிடித்தவர்கள் .
ஆகவே, இந்த விதவை சந்திரிகா பண்டார நாயக தனது கீழ்த்தரமான வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். சும்மா ஆட்டம் போட வரக்கூடாது என்பதை சொல்லிவைக்க விரும்புகின்றோம். விதவையான சந்திரிக்கா மீண்டும் திருமணமொன்றை நடத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறிக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *