Headlines

வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயம் சம்பிரதாயபூர்வமாக மன்னாரில் திறந்துவைக்கப்பட்டது




ஏ கே எம் சியாத்

வடக்கில் வாழும் முஸ்லீம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக இயங்க உள்ள  வடமாகாண முஸ்லிம் பிரஜைகளுக்கான குழு (Northern Muslim Citizens Committee (NMCC) பிரதான காரியாலயம் ஏ எச் எம் முபாரக் மெளலவி தலைமையில் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது.
இதில்  பிரதம அதிதியாக கலந்துகொண்ட மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்  வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயத்தை  சம்பிரதாயபூர்வமாகதிறந்து வைத்ததோடு  சிறப்புரையும் ஆற்றினார்.
நிலையத்தின் பணிப்பாளர் அஷ் ஷைக் நிஹ்மத்துல்லா( நளீமி) விசேட  உரை ஆற்றியதோடு அதன் தலைவர் ஏ எச் எம் முபாரக் (றசாதி) , மற்றும் அனைத்து மத தலைவர்களும் சிறப்புரை உரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *