Headlines

கூட்டு வன்புணர்ச்சியே சிறுமி சாவுக்கு காரணம் : நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடம் ஊரவர்கள் கதறல்




வவுனியா, கனகராயன் குளத்தைச் சேர்ந்த 16வயதுச் சிறுமி திடிரென உயிரிழந்தமைக்கு அவர் 10 பேரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையே காரணம் என்று ஊரவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

சிறுமியின் வீட்டுக்கு நேற்றச் சென்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடம் சிறுமியின் உறவினர்களும்,ஊரவர்களும் இதனைத் தெரிவித்தனர்.

சம்பவத்தை மூடிமறைத்துவிட குற்றவாளிகள் முயன்று வருகின்றனர் என்றும் ஊரவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். (U)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *