Headlines

சீகிரியா சுவரில் காதலனின் பெயரை கிறுக்கிய பெண்ணுக்கு 2 வருட சிறை




சீகிரியாவின் கண்ணாடி சுவரில் தனது காதலனின் பெயரை எழுதிய யுவதிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த உதேனி என்ற யுவதிக்கே இவ்வாறு 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது தனது காதலனின் பெயரை கண்ணாடி சுவரில் எழுதி சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு தம்புள்ளை நீதிமன்றம் 2 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *