Headlines

குப்பை பிரச்சினையை தீர்த்து கொழும்பை அழகுபடுத்திய கோத்தபாயவிற்கு நன்றி: ஏ.ஜே.எம் முஸம்மில்




முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கொழும்பு நகர அபிவிருத்திக்காக வழங்கிய ஆதரவிற்காக அவருக்கு நகரசபை சார்பில் அவருக்கு பாராட்டுக்கள் வழங்க வேண்டும் என கொழும்பு நகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நகரசபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பு நகரத்தில் காணப்பட்ட மெட்ரிக்டொன் அளவான குப்பைகளை அகற்றி குப்பை பிரச்சினையை முழுமையாக தீர்த்து வைத்ததன் காரணமாக இன்று கொழும்பு நகரம் அழகுடன் காணப்படுகின்றது.

அது நகர மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என கொழும்பு நகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *