Headlines

எலிசபெத் மகாராணியின் அழைப்பையேற்று ஜனாதிபதி பிரித்தானியா பயணம்!

இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்தின் விசேட அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவுக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி, எலிசபெத் மகாராணியுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், மகாராணி அளிக்கும் பகல் போசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். மார்ச் 9ஆம் திகதி இலண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பொதுநலவாய தினம்’ நிகழ்வுகளில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு சிறப்புரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்….

Read More

உங்களது வாழ்க்கை வளம் பெற வேண்டும் – அமைச்சர் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கில் நலிவுற்றிருக்கும் யுவதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுகளுக்காக எமது அமைச்சின் கீழ் இலவச தையல் பயிற்சிகளை வழங்குவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறான பயிற்சிகளை கற்பதற்கு பெறும் தொகை பணத்தினை செலவழித்து செல்வதை காணமுடிவதாகவும் கூறினார். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்த்தில் யுவதிகளுக்கான தையல் தையல் பயிற்சி நிலையத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த…

Read More

போர் வெற்றியைக் காட்டி குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது: சோபித தேரர்

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்பட வேண்டியது அவசியம். போர் வெற்றிகளைக் காரணம் காட்டி குற்றமிழைத்தவர்கள் எவரும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பாப்பரசர் முதற்கொண்டு உலகத் தலைவர்கள் பலரும் உண்மையைக் கண்டறிய வேண்டும் என தெரிவித்த கருத்துடன் தான் உடன்படுவதாகத் கூறிய சோபித தேரர், மறைப்பதற்கு இவ்விடயத்தில் ஏதுமில்லையல்லவா? என்று…

Read More

ஒபாமா எந்த மதம்?- ஆய்வால் அமெரிக்க அரசியலில் சலசலப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேள்வியை எழுப்பிய ஆய்வின் முடிவால் அமெரிக்க அரசியலில் பெரும் சலசலப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் விவரம்: அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் தியோடாரிடிஸ் தனது முனைவர் பட்டத்துக்காக, அமெரிக்க செனட்சபை தேர்தல் குறித்த ஆய்வை தொடங்கினார். அதில் ஒரு கட்டமாக அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்ற கேள்வியை பலதரப்பட்ட அமெரிக்கர்களிடம்…

Read More

குப்பை பிரச்சினையை தீர்த்து கொழும்பை அழகுபடுத்திய கோத்தபாயவிற்கு நன்றி: ஏ.ஜே.எம் முஸம்மில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கொழும்பு நகர அபிவிருத்திக்காக வழங்கிய ஆதரவிற்காக அவருக்கு நகரசபை சார்பில் அவருக்கு பாராட்டுக்கள் வழங்க வேண்டும் என கொழும்பு நகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நகரசபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பு நகரத்தில் காணப்பட்ட மெட்ரிக்டொன் அளவான குப்பைகளை அகற்றி குப்பை பிரச்சினையை முழுமையாக தீர்த்து வைத்ததன் காரணமாக இன்று கொழும்பு நகரம் அழகுடன் காணப்படுகின்றது. அது நகர…

Read More

இனவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் ! பிரதமரிடம் பைரூஸ் ஹாஜியார்

அஸ்ரப் ஏ சமத் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை அரசு நடந்த வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடத்தில் கடிதம் ஒன்றின் மூலம் விஷேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். குறிப்பாக அளுத்கம பேருவளை சம்பவங்களின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் மூலம்…

Read More

அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் செல்லுங்கள் – ஹக்கீம் ; அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் செல்லுங்கள் -சஜித்

அஸ்ரப் ஏ சமத் கொழும்பில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லீம் பெண்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் அமைச்சுக்களின் படிகளேறி சீரழிகின்றனர் கொழும்பில் அரசாங்கத்தினால் வழங்கும் வீடொன்றை பெற்றுக்கொள்வதற்காகவும், அல்லது தனது பிள்ளையை அரச பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்காக அமைச்சுக்களின் படிகள் ஏறி ஏறி வரிசையில் காத்து நின்கின்றனர். ஆனால் இந்தப் பெண்களின் கனவன்மார்கள் தமது மனைவிமார்களை அமைச்சுக்களுக்கு அனுப்பி சீரழியவைத்து விட்டு அவர்கள் வீடுகளில் அல்லது வியாபாரத்தில் தங்கி நிற்கின்றனர். இந்தப்பெண்கள், வரிசையில் மணித்தியாலயக்ககணக்கில் சிலர் காத்துநிற்கின்றனர். சிலர் கைக்குழந்தைகளுடன்…

Read More

படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வடக்கு கிழக்கு, மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் ஜனாதிபதி

அஸ்ரப் ஏ சமத் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி யாழ்ப்பாண கச்சேரி மற்றும் 9ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நடைபெறவுள்ளது. கடந்த ஜனாதிதபதித் தேர்தலின்போது 70 வீதமான வடகிழக்கு மக்கள் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்திருந்ததாகவும் அரசின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின தெரிவித்தார். வட கிழக்குபிரதேசங்களில் வாழும் மக்களது தனியார் காணிகளை அங்கு நிலை கொண்டுள்ள படையினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிப்பது சம்பந்தமாகவும்…

Read More

மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை கைத்தொழில்.,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார்….

மின்சாரமற்ற அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை கைத்தொழில்.,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார். மன்னார் –தலைமன்னார் பிரதான வீதி அருகில் அமைந்துள்ள கரிசல் கிராம மக்களின் நலன் கருதி இந்த மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முழு நாடும் ஒளி பெறுகிறது என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ,வடக்கின் வசந்தம் மின்சார திட்டத்தின் மூலம் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது மன்னார் மாவட்டத்தில்…

Read More