Headlines

ஜனாதிபதி; வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரவுசெலவுத்திட்டமாக இதனைப் பார்க்கிறோம் – அமைச்சர் றிஷாத்




இந்த வரவுசெலவுத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின்போது மைத்திரி நிர்வாகம் என்பதை அறிமுகப்படுத்தி முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரவுசெலவுத்திட்டமாக இதனைப் பார்க்கிறோம்.

குறிப்பாக கைத்தொழில்துறையை மேம்படுத்துவதற்காக அதேபோல இந்த நாட்டில் வாழுகின்ற வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கக் கூடிய பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது.

ஏற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்காக பல ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இதனூடாக எதிர்காலத்திலே மைத்திரி ஆட்சியை இந்த நாட்டில் நிலைநாட்டுவதற்கு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் வழங்கிய அந்த ஆதரவை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு ஆரம்பமாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *