Headlines

கரு ஜயசூரிய பொதுவேட்பாளராக வந்தால் நானே தோற்கடிப்பேன்!- உபேக்ஷா




ஐ.தே.க. விலிருந்து ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி இது தொடர்பாக ஊடகங்களுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கரு ஜயசூரியவை அறுபதினாயிரம் வாக்குகளையும் நான் எண்பத்தோராயிரம் அளவிலான வாக்குகளையும் பெற்றுள்ளோம்.

அந்த வகையில் கம்பஹா மாவட்டத்திலேயே நான் அவரைவிட அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளேன்.

அதுவும் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட போது எனக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்துள்ளது.

இப்படிப்பட்ட ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்கினால் அவரை எதிர்த்துப் போட்டியிட நான் தயார்.

நாடு முழுவதும் அவரை கூடுதலான வாக்குகளை என்னால் பெற முடியும்.

அப்படியிருக்க இவர்கள் எப்படி ஜனாதிபதிக்கு எதிராக வெற்றிபெற முடியும் என்றும் உபேக்ஷா சுவர்ணமாலி கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *