Headlines

நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் கோட்டாவுடன் –   றிஷாத் பேச்சு 

மன்னாரில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட நகுலேஸ்வரணின் கொலையின் பின்புலத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் – பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு செயலாளருடன் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இதுதொடர்பாக உரையாடியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- மன்னார் – வெள்ளாங்குளம் – கணேஷபுரம் என்ற பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரின்…

Read More

விமான நிலைய போராட்டத்தால் 10 கோடி ரூபா நஷ்டம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தால் 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்களால் 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தாலேயே இவ்வாறு 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 10, 000 ரூபாய் கொடுப்பனவு, வைத்திய காப்புறுதி, 4 சதவீதம் அனர்த்த கடன், பியா புத்து மன்றத்தின் ஊடாக தொழில்வாய்ப்பு. பாதுகாப்பு பிரதானி தொடர்பில் விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே…

Read More

அரசிலிருந்து வெளியேறுகிறது ஜாதிக ஹெல உறுமய

அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது. நேற்று ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிக்குள்ளே நடத்திய இரகசிய வாக்கெடுப்பில் 90% வீதமானோர் கட்சியிலிருந்து வெளியேறுமாறு வாக்களித்துள்ளனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

இனவாதமே அரசாங்கத்தின் ஆயுதம்; ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டு

அரசாங்கம் தனது தோல்வியை தவிர்த்துக் கொள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தல் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஆரம்பமாகி விட்டது. எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தடுக்கவும், அரசாங்கத்தின் தோல்வியைத் தடுத்துக் கொள்ளவும் இனவாதம், மதவாதம் என்பவற்றை அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது….

Read More

மஹிந்தவுக்கு பசில் என்றால் ரணிலுக்கு விராஜ்

ரணில் விக்கிரமசிங்க தமது பிரச்சார முகாமையாளராக தமது இளைய சகோதரர் விராஜ் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார். எனினும் பொதுவேட்பாளர் நிலைக்கு ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது கரு ஜெயசூரியவா? என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றபோதும் விராஜ் விக்கிரமசிங்க இந்த நிலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராஜ் விக்கிரமசிங்க, டிஎன்எல் தொலைக்காட்சி சேவையின் நிறைவேற்று அதிகாரியாவார்.

Read More

பொதுவேட்பாளர் நிலைப்பாடு! ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவரும்!- அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள்

இதன் மூலம் இலங்கையில் புதிய சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்றும் அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. விமல் வீரக்கொடி,  சியாமொன் ஜெயசிங்க உட்பட்ட பல இலங்கையர்கள் இந்த அமைப்பில் அங்கத்தவர்களாக உள்ளனர். அவர்கள் விடுத்துள்ள குறிப்பு ஒன்றில், நாடு இன்று இராணுவமயப்பட்டு சிவில் நிர்வாகம் அற்ற நிலையில் உள்ளது அரச நிர்வாகம் முழுமையாக சீர்குலைந்து போயுள்ளது. இதற்கு இலங்கையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே காரணமாக இருந்திருக்கிறது என்றும் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

Read More

ஆயுதங்களைக் காட்டி அதிவேகப் பாதையில் கொள்ளை!

அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகளுக்கென எடுத்து வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட இரும்புக் கம்பிகளின் பெறுமதி ஒரு லட்சத்தி முப்பத்தி ஐயாயிரம் ரூபா என்று தெரிய வருகின்றது. கொள்ளையைத் தடுக்க முயன்ற பாதுகாவலர்களை ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி இரும்புக் கம்பிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கடவத்தை சந்திக்கு அருகில் உள்ள மங்கட எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தக் கொள்ளையில் தொடர்புடைய இரண்டு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய கொள்ளையர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

Read More

பொது எதிரணிக்கிடையிலான ஒப்பந்தம் நாளை மறுதினமே கைச்சாத்து!

பொது எதிரணியாக இணையவுள்ள கட்சிகளுக்கிடையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த ஒப்பந்தம், நாளை மறுதினம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது எதிரணியின் ஒருங்கிணைப்புக்கு முக்கிய பங்காற்றிய மாதுளுவாவே சோபித தேரர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read More

கரு ஜயசூரிய பொதுவேட்பாளராக வந்தால் நானே தோற்கடிப்பேன்!- உபேக்ஷா

ஐ.தே.க. விலிருந்து ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி இது தொடர்பாக ஊடகங்களுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கரு ஜயசூரியவை அறுபதினாயிரம் வாக்குகளையும் நான் எண்பத்தோராயிரம் அளவிலான வாக்குகளையும் பெற்றுள்ளோம். அந்த வகையில் கம்பஹா மாவட்டத்திலேயே நான் அவரைவிட அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளேன். அதுவும் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட போது எனக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்கினால் அவரை…

Read More

கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக பலி…!!

ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை கிணற்றில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. பாலாவி வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இராசசேகரன் கோபினா பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் கிணற்றடியில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்த போது, குழந்தை தாய்க்கு முன்பாக நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் குழந்தையை காணவில்லை என தாயார் அயல் வீடு முழுவதிலும் தேடிய போது குழந்தையை காணவில்லை. பின்னர் கிணற்றிற்குள் பார்த்த போது, குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்துள்ளது. குழந்தை கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்தமை…

Read More

இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக் கலைஞராக யாழ். வாலிபர் தெரிவு!

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மஹாபிமாணி – 2014 என்ற தலைப்பில் கொழும்பு, மகரகம தேசிய இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார். இதன் போது யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் இலங்கையின் மிகச்சிறந்த கட்டிட நிர்மாணக் கலைஞருக்கான விருதைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு…

Read More

அபாய அறிவிப்பு (சிறப்புக்கட்டுரை)

திர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதுவரை அதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் கூட அரச தரப் பாலும் எதிர்க்கட்சிகளாலும் அதற் கான முன்னேற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு தரப்பில் மஹிந்த மூன்றாவது முறையாக வும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவது தொடர்பான சட்டபூர்வமான அங்கீகாரம் பற்றிய விளக்கத்தை உயர் நீதி மன்றத்திடம் பெறல், எதிர்க்கட்சி களை உடைத்து தம்பக்கம் பலம் சேர்த்தல், புதிய அமைச் சுப் பதவிகளை…

Read More