Headlines

மஹிந்தவிற்கு முடியும் என நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது: நாமல் ராஜபக்ச




குருணாகல் வதுராகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டு கால போரை நிறைவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு மூன்றாம் தடவை போட்டியிட முடியாது என எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

எனினும் உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியும் என தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் கட்டமாக குருணாகல் வந்துராகல பிரதேசத்தில் நேற்று கட்சிக் காரியாலயமொன்றை நாமல் ராஜபக்ச அங்குரார்ப்பணம் செய்து வைத்த போது ஜனாதிபதிக்கு மூன்றாம் தடவை போட்டியிடுவதில் பிரச்சினை கிடையாது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *