Headlines

பேலியகொட சந்தியில் துப்பாக்கிச் சூடு

பேலியகொட – நுகேவீதி சந்தியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்  முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் காலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் சிறு சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

இலங்கை அரசை பாதுகாப்பதற்கு ஆதாரங்களை மறைத்தது ஐ.நா.

இலங்கை அரசை குற்றச்சாட்டு களிருந்து காப்பாற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஆதாரங்களை மறைத் தது என இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. யுத்தக் குற்ற ஆவணங்கள் குறித்து ஐ.நாவில் இடம்பெற்ற கலந்துரையாட லின்போதே இந்தக் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த கலந்து ரையாடலின்போது கருத்துத் தெரி வித்த இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர், மத்யூ லீ இலங்கையில் 2009 இல் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து உடனுக்குடன் கிடைத்த உயிரிழப் புகள் குறித்த புள்ளிவிவரங்களை ஐ.நா….

Read More

உயர்நீதிமன்ற விளக்கத்தை ஏற்கத் தயாரில்லை – ஜே.வி.பி.

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட முடியுமென உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள சட்ட வியாக்கியானத்தை ஏற்க முடியாதென திட்டவட்டமாக நேற்று அறிவித்தது ஜே.வி.பி. அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு மஹிந்த முன்னெடுக் கும் நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கு ஜே.வி.பி. நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன் ஓரங்கமாக எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியை தமது கட்சி நடத்தும் என்றும் ஜே.வி.பியின் பொதுச் செய லாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். பத்தரமுல்லை…

Read More

ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி கூட்டங்களும் பேரணிகளும் ஆரம்பம்

2015 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை குறி வைத்து அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் கொழும்பில் நேற்று இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. இதன்படி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி ஜாதிக யஹல உறுமயவின் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் அரசுக்கு எதி ராகவும், ஜனாதி பதியின் கரங்களை பலப்படுத்தும் நோக்கில் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் அரசுக்கு ஆதரவாகவும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால், கொழும்பு அரசியல் களம் நேற்று மாலை…

Read More

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எதிரணியில்?

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எதிரணியில் இணைந்து கொள்வார்கள் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ‘தூய்மையான நாளை’ அமைப்பு கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…

Read More

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதிகளில்!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 19 அல்லது 20ஆம் திகதிகளில் வெளியிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. வர்த்தமானியில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும், அன்றிலிருந்து 16 நாட்களுக்குள் வேட்புமனு கோரல் இடம்பெறும். இந்த வேட்புமனுத் தாக்கல் 30 நாட்களை தாண்டாது. வேட்புமனுத் தாக்கலின் பின்னர் 30 நாட்களுக்கு தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்று தேர்தல் நடைபெறும். இது, 60 நாட்களை தாண்டிச் செல்லாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை…

Read More

இந்திய உயர்ஸ்தானிகர் சிறுபான்மை கட்சித் தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தை?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை இவ்வாறு சந்தித்துள்ளார். கடந்த 8ம் திகதி இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ரவூப் ஹக்கீம் மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அவசர அழைப்பு விடுத்து இந்த சந்திப்பை நடத்தியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையிலான சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு…

Read More

கட்டாரில் “நல்ல இல்லம்” என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு

அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 13-11-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது. கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!! ஒவ்வொரு வியாழன்…

Read More

மஹிந்தவிற்கு முடியும் என நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது: நாமல் ராஜபக்ச

குருணாகல் வதுராகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டு கால போரை நிறைவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு மூன்றாம் தடவை போட்டியிட முடியாது என எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர். எனினும் உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியும் என தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஓர் கட்டமாக குருணாகல் வந்துராகல பிரதேசத்தில் நேற்று…

Read More

பொது வேட்பாளர் அதிகாரத்தை பாராளுமன்றத்திடம் கையளிப்பவராகவே இருப்பார்: மனோ கணேசன்

எதிரணியின் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து விட்டு விடைபெறும் ஒரு இடைக்கால ஜனாதிபதியாகவே இருப்பார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அங்கு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “உண்மையில் எதிரணி பொது வேட்பாளர், வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து விட்டு விடைபெறும்…

Read More

பொய் சொல்லும் இந்திக்க : கண்டுபிடித்த வணிகசூரிய

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் போது, மாணவி ஒருவரின் முதுகெழும்பில் முறிவு ஏற்பட்டதாக வெளியான தகவலை இராணுவம் மறுத்துள்ளது. கடந்த 9ம் திகதி தலைமைத்துவ பயிற்சியின் போது ஆறு அடி உயரமான சுவர் ஒன்றில் இருந்து குதித்த போது, கௌசல்யா விஷிதமால் என்ற மாணவிக்கு முதுகெழும்பில் முறிவு ஏற்பட்டதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதற்கு மறுப்புத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ருவண் வணிகசூரிய, மாணவிக்கு முதுகெழும்பில்…

Read More

அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் ஆசிரியர் சாதனை

இம்மாதம் 10, 11ம் திகதிகளில் நுவரெலிய மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்த அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்றாஹிம்   (PT கபூர்) சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 51 தொடக்கம் 55 வயது வரைக்குமான பிரிவுப் போட்டியில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சிகளில் தங்கப்பதக்கத்தினையும், 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கத்தினையும் பெற்று  கிழக்கு…

Read More