மருதூர் ஜஹான்) கெளரவ அதிமேகு ஜனாதிபதியினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களினதும் ஆலோசனைக்கமைவாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது (09) வது பொலன்னறுவை கிளை கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான கலாநிதி ஏ. எம். ஜெமீல் அவர்களால் நேற்று 07.08.2017ம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இது இக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியினை கலாநிதி ஏ.எம். ஜெமீல் அவர்கள் பொறுப்பேற்றதன் பிற்பாடு ஒன்றரை வருடத்துள் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது கிளையென்பது குறிப்பிடத்தக்கது.

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது கிளை பொலன்னறுவையில் திறந்து வைப்பு.
