Headlines

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் பொருளாதார மத்திய நிலையம்




கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின்  300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட உள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணியை பார்வையிடுவதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி சென்று பார்வையிட்டார்.
பொருளாதார மத்திய நிலையம்  அமைத்து தருமாறு   முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் வேண்டிக் கொண்டதற்கு  இனங்க  இவ் மத்திய நிலையம் அமையப் பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இவ் மத்திய நிலையம் அமையும் பட்சத்தில்  இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்மடையும் என்றும் குறிப்பிட்டார்.
இதன் போது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சேனநாயக்கா , மாவட்ட  உதவி  அரசாங்க அதிபர் கிரிதரன், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம், மற்றும் பிரதேச பிமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *