Headlines

மாணவத் தலைவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன்




கண்டி – செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை 10ஆம் வகுப்பு மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நேற்று  (29)நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவத் தலைவரை கண்டி பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த 10ஆம் வகுப்பு மாணவன் தற்போது கட்டுகஸ்தோட்டை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *