Headlines

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனுக்கு உரிமைகள் இல்லை: இத்தாலி எச்சரிக்கை

பொது வாக்கெடுப்பு நடத்தி வெளியேறிய பின் ஐரோப்பிய யூனியனில் இருந்து மற்ற நாடுகளை விட அதிக உரிமைகள் எதிர்பார்க்கக் கூடாது என்று பிரிட்டனுக்கு இத்தாலி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக அதிகப்படியான மக்கள் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து முறைப்படி வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…

Read More

பலத்த பாதுகாப்பையும் தாண்டி தென் கொரியாவுக்குள் நுழைந்த வடகொரிய வீரர்

வடகொரியாவும், தென்கொரியாவும் தீராப்பகை நாடுகளாக உள்ளன. இந்த நிலையில் வெகு அபூர்வ சம்பவமாக, பலத்த பாதுகாப்பு கொண்ட எல்லையை தாண்டி, வடகொரியா வீரர் ஒருவர் தென் கொரியாவுக்குள் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு நுழைந்தார். அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை. அவர் மீது தென் கொரியா வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவும் இல்லை. அவர் எப்படி நுழைந்தார், எதற்காக நுழைந்தார் என்பது குறித்து தென் கொரியாவின் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தென்…

Read More

ரூ.5400 கோடி வருமானம் இழந்த டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கோடீசுவரரான இவர் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். தேர்தலில் போட்டியிடுவதால் கடந்த ஒரு வருடமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதனால் அவர் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் கடந்த ஒரு வருடத்தில் அவரது வருமானம் ரூ.5400 கோடி குறைந்துள்ளது. இத்தகவலை பிரபல ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் விற்பனைக்காக 28 கட்டிடங்கள் கட்டினார். ஆனால் தேர்தல் பிரசாரத்தில் ‘பிசி’…

Read More

உதயங்கவின் சிவப்பு பிடியாணை கோரிக்கை நிராகரிப்பு!

ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றிடம் இரகசிய பொலிஸார் முன்வைத்த கோரிக்கையானதுநீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு 14 மில்லியன் அமெரிக்க டொலரகளுக்கு மிக் விமானக் கொள்வனவு கொடுக்கல்வாங்கல் தொடர்பாக உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு இரகசியப் பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றில் கோரிக்கைவிடுத்தனர். எனினும் நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று இரண்டாவது தடவையாகவும் குறித்தகோரிக்கையினை நிராகரித்துள்ளார். இதேவேளை முன்னாள் ரஸ்யாவிற்கான தூதுவர் குறித்த வழக்கின் குற்றவாளியாக…

Read More

இலங்கையில் 40 பெண்களில் ஒருவருக்கு புற்றுநோய்!

இலங்­கையில் 20 வய­துக்கு மேற்பட்ட பெண்கள் 40 பேரில்  ஒரு­வ­ருக்கு மார்­பக புற்­றுநோய் ஏற்­படும் அபாயம்  இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ள­தாக புற்­று நோய் சிகிச்சை நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர். இந்­நாட்டுப் பெண்­களில் நாளாந்தம் 6 – 7 பெண்கள் மார்பு புற்­றுநோய் கார­ண­மாக சிகிச்­சைக்கு வரு­வ­தா­கவும்   வைத்­திய  நிபு­ணர்கள் மேலும் தெரி­விக்­கின்­றனர். இதன்­படி  வரு­ட­மொன்­றுக்கு சுமார் 250 பெண்கள் மார்புப் புற்று நோயால் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்­நாட்டில் புற்­று­நோயால் பாதிக் ­கப்­ப­டு­ப­வர்­களில் 25 சத வீதமானோர் மார்புப் புற்­று­நோயால் பாதிப்படைவ…

Read More

புற்றுநோய்க்கு எதிராக, போராட விரும்புகிறீர்களா..?

இலங்கையின் மிகப்பெரும் அபாயமாக புற்றுநோய் விளங்குகிறது. பிரதான புற்றுநோய் சிகிச்சையளிப்பு வைத்தியசாலையாக மஹரகம விளங்குகிறது. இந்த வைத்தியசாலைக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கிற போதிலும் அது போதுமானதாக இல்லை. இந்த வைத்தியசாலைக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கதீஜா பௌண்டேசனும், அதன் நிறுவனர் மொஹமட் ஹாஜியும், அதன் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இலங்கையர்களிடையே 252 மில்லியன் ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். அந்த நிதியில் நவீன பெட் ஸ்கேன் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு இன்னும் பலபல…

Read More

இலங்கை – சீனா உறவு பலப்படுத்தப்படும் – ஜனாதிபதி

இலங்கை மற்றும் சீனாவுடனான நட்பை நாளுக்கு நாள் பலப்படுத்தி முன்னோக்கிசெல்வதற்கான நடவடிக்கையினை நல்லாட்சி மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். 67வது சீன தேசிய தினம் மற்றும் சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் 35வதுஆண்டுநிறைவு விசேட நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத்தெரிவித்துள்ளார். மேலும் அபிவிருத்தி, முதலீட்டுத்துறை மற்றும் சர்வதேச மட்டத்திலும் சீனாமற்றும் இலங்கையின் உறவு உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். சீன அரசானது இலங்கையுடன் எப்போதும் நல்லுறவைப் பேணி வரும் அரசு என்றும்ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கல்வித்துறை, வீதி…

Read More

யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட நிறுவனங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு தீர்மானம்

-சுஐப் எம்.காசிம் – பிரதேசசெயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகளையும், தீர்மானங்களையும் அடுத்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு முன்னர் நடைமுறைப்படுத்தும் வகையில், திணைக்கள அதிகாரிகளும், நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என்று இணைத்தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று காலை (30/09/2016) பணிப்புரை விடுத்தார். முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், நானாட்டான் பிரதேசசபை செயலாளரும், முசலி பிரதேசசபை பதில் செயலாளருமான மரியதாசன் பரமதாசனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான…

Read More

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு சம்பளம் உயர்த்தப்படவுள்ளது. எதிர்வரும் மாதம் மதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. சம்பள உயர்வு தொடர்பில் திறைசேரியினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஷசி வீரவன்ச மீது வழக்கு தாக்கல்

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச மீது இன்று(30) வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு போலி தகவல் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து முறைசாரா வழியில் வெளிநாட்டு கடவுசீட்டினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டமா அதிபரின் ஆசோனைக்கமைய குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் ஷசி வீரவன்சவுக்கு எதிரான முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான்…

Read More

வற் வரி: வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும்

புதிய வற் வரி சீர்திருத்தம் தொடர்பான சட்ட மூலம், சட்ட ரீதியான முறையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது,  எவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும் அதற்கு முகம்கொடுக்க அரசு தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். புதிய வரவு செலவுத் திட்டம் எந்தவொரு அரசியல் இலாபங்களையும் கருத்திக் கொண்டு தாயரிக்கப்படுவதில்லை. எதிர்வரும் தேர்தலுக்கும் வரவு செலவுத் திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இன்னும், நல்லாட்சி அரசாங்கத்துக்கு நாட்டு…

Read More

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு மரண தண்டனை

தம்பதியரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை நேற்று (29) நீதிபதி என்.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த தம்பதியரின் குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் 50 வயதான நீர்வேலி பகுதியைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

Read More