Headlines

கோரிக்கையை வாபஸ் பெற்றார் நிசாந்த




இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிசாந்த ரணதுங்க ஜக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்வதற்காக கொழும்பு மேல் நிதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவரின் சட்டத்தரணியால் இன்று (10) வாபஸ் பெற்றுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை குறித்த அனுமதியை பெற்றுத்தருமாறு இவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் நிசாந்த ரணதுங்கவிடம் கடவத்தை நீதவான் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்றுவரும் நிலையிலேயே குறித்த கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *