Headlines

வத்தளை நடைபயிற்சிப் பாதையின் மீள்நிர்மாணப்பணிகள் நிறைவு




சிலரால் உடைத்து நாசப்படுத்தப்பட்ட, வத்தளை, களுஎலவுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த நடைபயிற்சிப் பாதையின் மீள்நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைப்பயிற்சிப் பாதை, குடியிருப்புப் பகுதிவரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிரந்தர வடிகாலமைப்புத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப் பாதை, மக்கள் பாவனைக்காக விரைவில் திறக்கப்படும் என காணி, சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் இணைப்புச் செயலாளர் மிஹிரி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *