Headlines

வசிம் தாஜூதீனின் கொலை வழக்கு தீர்ப்பு இன்று அறிவிக்கப் படாது




பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் கொலை தொடர்பாக, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரை விசாரணை செய்யுமாறு, நீதிமன்றம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை பணித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், சந்தேகத்துக்கிடமாகவுள்ள இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வாசக்கின் தீர்ப்பு இன்று (10 ) வழங்கபடும் என பலராலும் எதிரபார்க்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *