Headlines

உரியவர்கள் மோ. சைக்கிள், சைக்கிளை பெறலாம்




கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை உரியவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று கேட்டுக் கொண்டுள்ளது. நெடுந்தீவுச் சந்தைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை நெடுந்தீவுப் பொலிஸார் மீட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். அவ்வாறு கடந்த மே மாதம் ஊர்காவற்றுறைப் பொலிஸார் என்.பி.ஜே.கியூ இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். அவற்றை உரியவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றப் பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *