Headlines

ஹிஜாபுக்கு ஆதரவாக முஸ்லிம் அல்லாத மக்கள் ஆர்பாட்டம்! (வீடியோ இணைப்பு)

முஸ்லிம் பெண்கள், முகத்தை மறைக்கும் ‘ஹிஜாப்’ அணிய அனுமதித்தால் நாடு பிளவு பட்டுவிடும் என்று கூறிய ‘கனடா’வின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அல்லாத மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். ‘வின்னிபெக்’ பகுதியில் செண்ட்ரல் மசூதிக்கு அருகில் செவ்வாயன்று (13-10-2015), ஒன்று கூடிய 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத மக்கள், முஸ்லிம்களின் ஹிஜாபுக்கு ஆதரவாக பேரணி நடத்தி தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.

Read More

இறைதூதர் லூத் (அலை) வாழ்ந்த நகரம் கண்டுபிடிப்பு.!

குர்ஆனில் பெயர் குறிப்பிட படும் இறைதூதர்களில் லூத் (அலை) அவர்களும் ஒருவர். இவர்கள் இப்றாஹிம் நபி (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்ததாக திரு குர்ஆன் குறிப்பிடுகிறது. இந்த நபியின் சமுதாயத்தவர் ஓரின சேர்க்கையில் நாட்டம் உள்ளவர்களாக வாழ்ந்தனர். இவர்களை லூத் (அலை) அவர்கள் மூலம் இறைவன் கடுமையாக எச்சரித்தான். இறைவனின் அறிவுரையை ஏற்க மறுத்த இந்த சமூகம் இறைவனின் கோப பார்வைக்கு உள்ளானது. வானில் இருந்து கல் மழையின் மூலமும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளை தலைகீழாக இறைவன் புரட்டி போட்டதின் மூலமும் அந்த சமுகத்தை…

Read More

சதொச; சிங்கப்பூர் சில்லறை வர்த்தகதுறையை பின்பற்ற வர்த்தக அமைச்சர் உறுதி!

இலங்கைச் சந்தையில் மிக முக்கியமான பொருட்களின் விலைகளை அறிவிக்கும் செயற்பாடுகளையுடய அரசுக்ககு சொந்தமான சதொச மலிவு விற்பனை நிலையத்தை விஸ்தரித்து நவீன மயப்படுத்தும் பணிகள் முன்னெடுபப்பட்டு வருகின்றது. சதொசவை புதுப்பிக்கவும் விஸ்தரிக்கவும் சிங்கப்பூர்னுடைய சில்லறை வர்த்தகதுறை மாதிரியினை பின்பற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என கைத்தொழில் மற்றும் அமைச்சர் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார.; விசேட மரியாதை அழைப்பொன்றின் நிமித்தம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்கு…

Read More

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் : நவ. 7 க்கு முன்னர் நிரந்தர தீர்வு ; ஜனாதிபதி உறுதி

– ஆர். ராம் – சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். சுமந்திரன் தெரிவித்தார். அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் , தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமக்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று காலை  முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் அவர்களின் கோரிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட…

Read More

சுகாதார துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள.. – ஜனாதிபதி

சுகாதார துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி பொது மருத்துவமனையில் 7 மாடி கட்டடதொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதன்போது, கண்டி நகரிற்கு அஞ்சுறுத்தல் ஏற்படுத்தும் அதிக வாகன போக்குவரத்து நெரிசல், குப்பைகூழ பிரச்சினைகள் தொடர்பிலும்…

Read More

முன்னாள் ஜனாதிபதியிடம் சாட்சியங்கள் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்று பாரிய குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவில் முன்னிலையாகினர். ஆணைக்குழுவின் செயலாளர் லெஸ்லி டி சில்வா இதனை செய்தி சேவைக்குத் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கான 200 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவில்லை. இது தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யும் நோக்கிலே அவர்கள் ஆணைக்குழுவிடம் முன்னிலையாகியுள்ளனர். இதேவேளை, பாரிய நிதி மோசடி…

Read More

சினிமா பாணியில் பெண் கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்டது பொலிஸ்

வடமராட்சி கம்பர்மலைப் பகுதியில் இளம் பெண்ணொருவர் சினிமாப் பாணியில் கடத்திச் செல்லப்பட்டு எட்டு மணி நேரத்தினுள், பொலிஸாரின் அதிரடி முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன் படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வடமராட்சிப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று வடமராட்சிப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்…

Read More

அடுத்தாண்டு சுதந்திர நிகழ்வினை மாலை வேளையில் நடத்த யோசனை

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு மாலை வேளையில் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டு இலங்கையின் 68ம் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மாலை வேளையில் நடாத்தப்படும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுவாக இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் முற்பகலில் நடாத்தப்படுவதே வழமையானதாகும். எனினும் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு மாலையில் நடத்தப்பட உள்ளது. அடுத்த நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பற்றிய…

Read More

ஓடையில் விழுந்த மாணவி பாத்திமா அஸ்ரா பலி

– J.M.Hafees – கட்டுகஸ்தோட்டை – நித்தவலை பகுதியில் நேற்று மாலை வீதி ஓரமான சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் ஓடை ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்விகற்கும் 16 வயதுடைய  பாத்திமா அஸ்ரா சகாப்தீன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

மஹிந்தவின் ஆட்சேபனை நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்தை, பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இன்றைய தினம்  பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவர் சார்ந்த தரப்பினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து…

Read More

உரியவர்கள் மோ. சைக்கிள், சைக்கிளை பெறலாம்

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை உரியவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று கேட்டுக் கொண்டுள்ளது. நெடுந்தீவுச் சந்தைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை நெடுந்தீவுப் பொலிஸார் மீட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். அவ்வாறு கடந்த மே மாதம் ஊர்காவற்றுறைப் பொலிஸார் என்.பி.ஜே.கியூ இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். அவற்றை உரியவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றப் பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More