Headlines

சேயா செதெவ்மி கொலை – 10 பேரிடம் வாக்குமூலம்




சேயா சதெவ்மி என்ற சிறுமியின் கொலை தொடர்பில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்ட கொட்டதெனியாவை பகுதியைச் சேர்ந்த சிலர் இன்று திவுலுபிட்டிய காவற்துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைதாகி விடுவிக்கப்பட்ட 17 வயதான மாணவர் மற்றும் குடும்பஸ்த்தர் ஆகிய இரண்டு பேரும், காவற்துறையினருக்கு எதிராக முறைபாட்டை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 10 பேர் வரையில் வாக்குமூலம் வழங்கியதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *