Headlines

புதிய ஆய்வில் இறங்கியுள்ள இளம் விஞ்ஞானி அஹ்மத்

கடிகாரத்தை சுயமாக தயாரித்து பள்ளிக்கு எடுத்து வந்த முஸ்லிம் சிறுவனை, வெடி குண்டை கொண்டு வந்திருப்பதாக கருதி அந்த சிறுவனின் கையில் விலங்கு மாட்டியது ஒரு அமெரிக்க கல்விகூடம். பிறகு அந்த தவறு சரி செய்ய பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவே அந்த சிறுவனை அழைத்து உபசரித்து உற்சாகபடுத்தினார். அந்த சிறுவன் அஹ்மது, தற்போது அவனது குடும்பத்தோடு சவூதி மன்னர் சல்மானின் விருந்தாளியாக மக்காவிற்கு உம்ரா  செய்ய வந்துள்ளான். சிறுவன் அஹ்மது சவூதி அரேபியாவில் ரியாத் நாளேடுக்கு…

Read More

முஸ்லிம் என்றால்..!

முஸ்லிம் நாணயமானவனாக இருப்பான், நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான், அவனுக்கு இறைவன் தடுத்தவற்றை ஒருபோதும் எடுக்க மாட்டான், அவன் கஷ்டத்தில் இருந்தாலும் நஷ்டத்தில் இருந்தாலும் அமானிதங்களை பேணகுடியவனாக இருப்பான், அடுத்தவன் பொருளுக்கு ஆசை படாதவனாக இருப்பான். சிரிய முஸ்லிம்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு சென்று குடியேறி வருகின்றனர், அகதிகளாக செல்பவன் குபேரனாக இருக்க வாய்பில்லை, சிரிய அகதிகளில் பலர் அன்றாட உணவு தேவைகளுக்கே சிறமபடுகின்றனர்.    இந்த சிறமம் நிறைந்த சூழலிலும் அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடாத, தனக்கு தேவைகள் இருந்தாலும்…

Read More

அலுக்கோசு பதவிக்கான நேர்முகத்தேர்வு நாளை

வெற்றிடமாக காணப்பட்ட சிறைச்சாலை அலுகோசு பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை, நாளை செவ்வாய்க்கிழமை(13) நடைபெறும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக பிள்ளையான குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டார். அதற்கமைய நேற்று மாலை 05 மணியளவில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகிய நிலையில் முதற்கட்ட வாக்குமூலம் பெற்றுகொண்டதன் பின்னர் அவர்…

Read More

சேயா செதெவ்மி கொலை – 10 பேரிடம் வாக்குமூலம்

சேயா சதெவ்மி என்ற சிறுமியின் கொலை தொடர்பில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்ட கொட்டதெனியாவை பகுதியைச் சேர்ந்த சிலர் இன்று திவுலுபிட்டிய காவற்துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கைதாகி விடுவிக்கப்பட்ட 17 வயதான மாணவர் மற்றும் குடும்பஸ்த்தர் ஆகிய இரண்டு பேரும், காவற்துறையினருக்கு எதிராக முறைபாட்டை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 10 பேர் வரையில் வாக்குமூலம் வழங்கியதாக காவற்துறை…

Read More

கொரியாவில் மீன்பிடித் தொழில் புரிய விருப்பமா?

15வது கொரிய மொழி பரீட்சையின் மீன்பிடி பிரிவில் வேலை வாய்ப்பு தொடர்பிலான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 21ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்காலை, காலி, மாத்தறை, சீதுவ மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள பயிற்சி மத்திய நிலையங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இதேவேளை 18 வயது முதல் 39 வயது வரையானவர்கள் மற்றும் மீன்பிடித்துறையில்…

Read More

கடந்த காலத்தில் உலகின் புற்றுநோயாளி என சர்வதேசம் இலங்கையை அடையாளப்படுத்தியது – சஜித்

அரசாங்கம் எந்த காரணத்தை அடிப்படையாக கொண்டும் நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பை காட்டிக்கொடுக்காது என்பதுடன் கலப்பு நீதிமன்றம் ஒன்று நாட்டிற்குள் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம உடுவில பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே மக்கள் ஆணை வழங்கினர். அந்த மக்கள் ஆணையின் மூலம் நாங்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளோம். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு எதிராக செயற்பட்ட…

Read More

சுத்தமான குடிநீரை கோரி ஆர்ப்பாட்டம், பொலிஸார் தடியடி பிரயோகம்

திஸ்ஸ – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் பல்லேமல சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். பந்தகிரிய பிரதேசவாசிகளே ஆர்ப்பாட்ட த்தை மேற்கொண்டுள்ளனர். சுத்தமான குடிநீரை கோரி இவர்கள் ஆர்ப்பாட்ட த்தை முன்னெடுத்துள்ளனர்.

Read More

பத்தரமுல்லையில் சடலம் மீட்பு

பத்தரமுல்லை – தலஹென சந்தியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

காத்தான்குடியில் குண்டு வெடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ.எல்.எஸ்.மாவத்தையல இன்று பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில்  குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஏ.எல்.எஸ்.மாவத்தையில் 58ஆம் இலக்க வீட்டின் அருமையிலுள்ள வெற்று வளவு ஒன்றை கூட்டி துப்புரவு செய்து கொண்டிருந்தபோது குப்பைக்குள்ளிருந்த குண்டே வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 2 பிள்ளைளின் தந்தையான எச்.எம். இர்சாத் என்ற 32 வயது குடும்பஸ்தரே படுகாயமடைந்தவராவார். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

புதிய போக்குவரத்து ஒழுங்கு : கடும் வாகன நெரிசல்

கொழும்பின் சில வீதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து ஒழுங்கு முறைகள் காரணமாக பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய பத்தரமுல்லை, பாராளுமன்ற சுற்றுவட்டம், வெலிக்கடை மற்றும் இராஜகிரிய ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஏறாவூர் பிரதேசத்தில் 1 கோடி ரூபா பெறுமதியான மீன்கள் சிக்கின!

ஏறாவூர் பிரதேச சவுக்கடி கடலில் கடந்த இரு தினங்களில் மீனவர் இருவரின் கரைவலைகளில் சுமார் இருபதாயிரம் கிலோ கிராம் எடைகொண்ட ஆயிரத்தைந்நூறு பாரை மீன்கள் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பலர் கடற்கரையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம். ஷபீக் மற்றும் எஸ். சுதாகரன் ஆகியோரது  கரைவலைகளிலேயே இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலமாக கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடல் மீன்கள் குறைவாகவே பிடிபட்டு வந்தமை…

Read More