முஸ்லிம்களை பிழையாக வழிநடத்தும் ஒரு மகா பொய்யனே ‘ஹிஸ்புல்லாஹ்’ – தவிசாளர் அமீர் அலி!
“ஹிஸ்புல்லாஹ், தான் எம்.பி.யாக வேண்டும் என்பதற்காக, எதையும் செய்யக் கூடிய ஒருவர்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஹிஸ்புல்லாஹ் நொந்து நூலாகிப்போன நேரத்தில், அவரை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றிபெற வைத்தோம். வெற்றி பெற்றதன் பின்னர், எங்களுக்குத் தெரியாமலே…
