Headlines

Video- “கைத்தொழில் முயற்சிகளை முன்னேற்ற முறையான திட்டம் தேவை” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

கைவிடப்பட்டு வரும் கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு கொரியா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்புக்களை பெற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வர்த்தக வாணிபம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (01) சபையில் உரைநிகழ்த்திய அவர் கூறியதாவது, “அந்நியச்செலாவணியை அதிகம் ஈட்டும் துறைகளில் கைத்தொழில்துறை பிரதானமானது. அரசு அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளால், சிறிய மற்றும்…

Read More

Video- “தமிழர்கள், முஸ்லிம்கள் என்பதாலா கிழக்கு மாகாண சதொச ஊழியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்?” –

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் கேள்வி! கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய தினம் (01) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நான் கைத்தொழில் வர்த்தக அமைச்சைப் பொறுபேற்ற போது…

Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் – தவிசாளர் அமீர் அலி!

இன்று வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சகல பாடங்களிலும் அதி விஷேட (A) சித்திகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களையும் மற்றும் உயர்தரத்தில் கற்பதற்கான தகுதியை பெற்றுக்கொண்ட மாணவர்களையும் மன மகிழ்வுடன் வாழ்த்துவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான M.S.S.அமீர் அலி தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்தள்ளதாவது, “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற வள்ளுவன் வாக்கிற்கொப்ப, எமது மாணவச்…

Read More

காலநிலை மாற்றங்களுக்கான ஐ.நா சர்வதேச மாநாட்டில் இளைஞர்களின் பிரதிநிதியாக ஹஸீப் மரிக்கார்!

காலநிலை மாற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 28ஆவது மாநாடு (COP28) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இலங்கை நாட்டு இளைஞர்களின் பிரதிநிதியாக முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் முன்னாள் பேருவளை பிரதேச சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார் கலந்துகொள்கிறார். மேலும், இந்த மாநாட்டில் பல்வேறுபட்ட நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள், சுற்றாடற்றுறை…

Read More