Headlines

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்-கனடா உயர்ஸ்தானிகர் இடையிலான சந்திப்பு!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னின் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று (14) அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் மற்றும் கட்சியின் முக்கியஸ்தரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read More

“இணையத்தள தொடர்பாடல் வலையமைப்பை வழங்குங்கள்”- தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அலி சப்ரி ரஹீம் எம்.பி கோரிக்கை!

கல்பிட்டி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முதலைப்பாளி உள்ளிட்ட பல கிராமங்களில் தொலைபேசிகளுக்கான இணையத்தள தொடர்பாடல்களுக்கு போதுமான வலையமைப்பு (Network) இல்லாமையால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுவதாகவும், இது தொடர்பில் தொழில்நுட்ப அதிகாரிகளை அனுப்பி இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க ஆவன செய்யுமாறும் பிரதான மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்பிட்டி பிரதேசத்துக்கு அண்மையில் தாம் விஜயம் செய்திருந்த போது, கையடக்கத் தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகள் இல்லாத குறையினை அவதானிக்க முடிந்தது எனவும்…

Read More

அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் முஷாரப் எம்.பிக்கு பாராட்டு விழா..!

பொத்துவில் கல்விக் கோட்டப் பாடசாலை அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபை பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு, பொத்துவில் ஹேங்லூவ்ஸ் ஹோட்டலில் (05) இடம்பெற்றது. அதிபர் சங்கத்தின் தலைவரும் பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபருமாகிய ஜனாப்.கே.ஹம்ஸாவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.புஹாரியினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துரையும் நிகழ்த்தப்பட்டது. அத்தோடு, அதிபர் சங்கதத்தினால் வாழ்த்துப்பா பாடப்பட்டு, அது நினைவுச் சின்னமாகவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொத்துவில்…

Read More

புத்தளம் – கரைத்தீவு; மாலை நேர போக்குவரத்து சேவையினை நடத்துமாறு அலி சப்ரி ரஹீம் எம்.பி வேண்டுகோள்!

புத்தளத்திலிருந்து கரைத்தீவுக்கான மாலை நேர பயணிகள் போக்குவரத்து சேவையினை நடத்துமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் முகாமையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கரைத்தீவிலிருந்து பல தேவைகளுக்காவும் குறிப்பாக, மாலை நேரத்தில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு வருகைதரும் பொதுமக்கள், நோயாளிகளை பார்வையிட்டதன் பின்னர், மீண்டும் மாலை 6.00 மணிக்கு கரைத்தீவுக்கு செல்வதற்கு பேரூந்து வசதிகளின்றி பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இதனையடுத்து, புத்தளம் பேருந்து…

Read More

‘கரைத்தீவு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள்’ – சுகாதார சேவை பணிப்பாளருக்கு அலி சப்ரி ரஹீம் எம்.பி எடுத்துரைப்பு!

புத்தளம் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கரைத்தீவில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும், சிற்றூழியர்களையும் நியமித்து, அம்மக்களின் சுகாதார தேவையினை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு அவசரக் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். இது தொடர்பில், அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புத்தளம் மாவட்டத்தில், கரைத்தீவு கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்குத் தேவையான வைத்தியர்கள் இன்மையால், பிரதேச…

Read More

‘அனைத்து இனங்களையும் அரவணைத்து முன்மாதிரியான அரசியலை மேற்கொள்வேன்’ – புத்தளம், கொத்தாந்தீவில் அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் சகல இனங்களையும் அரவணைத்து, ஒரு முன்மாதிரியான அரசியலை முன்கொண்டு செல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை ஒருபோதும் பாழ்படுத்தப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். புத்தளம், கொத்தாந்தீவில் நேற்று (05) இடம்பெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அலி சப்ரி ரஹீம் எம்.பியின் பாராளுமன்றச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ், பிரத்தியேகச் செயலாளர் ஜே.எம்.ஜௌஸி, கொத்தாந்தீவு மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் முஹம்மட் நஸீர் ஆகியோர்…

Read More

“மினி கார்மெண்ட்” செயற்திட்டத்தின் மூலம் பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கைத்தொழில், வர்த்தக அமைச்சராக இருந்தபோது, அவ்வமைச்சின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட மினி கார்மெண்ட் (Mini Garment) செயற்திட்டத்தின் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று (3) பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். குறித்த நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயலாளரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதோடு, இந்தச்…

Read More

“தமிழ் மொழியில் பரிச்சயமுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமியுங்கள்” – அலி சப்ரி ரஹீம் எம்.பி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

புத்தளம் மாவட்டத்தில், தமிழ் மொழியில் பரிச்சயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளுக்கும் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “புத்தளம் தேர்தல் தொகுதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் சுமார் 70% வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் தமிழ்,…

Read More

“அம்பாறை மாவட்டத்தில் பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற மரபை, மக்கள் காங்கிரஸ் உடைத்தெறிந்துள்ளது” – பொத்துவிலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்று (30) பொத்துவிலில் இடம்பெற்ற வெற்றிப் பெருவிழாவில் பிரதம விருந்தினராக அவர் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி…

Read More

பொத்துவிலில் வெற்றிப் பேரணி..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்புக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, நேற்று (30) அம்பாறையில் நடைபெற்ற வெற்றிப் பேரணியில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம், முஷாரப் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.  

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் – புத்தளம் –

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, புத்தளம் மாவட்டத்தின் சவரான, மைக்குளம், சிலாபம், வட்டக்களி, சங்குத்தட்டான், ஜயபிம பகுதிகளில் நேற்று (29) நடைபெற்ற நிகழ்வுகளில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More

“தேசப்பற்றை உருவாக்குவதன் மூலமே நாட்டை முன்னேற்றலாம்” – கன்னி உரையில் முஷாரப் எம்.பி!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை… (27. 08. 2020)  கௌரவ சபாநாயகர் அவர்களே! பாராளுமன்றத்தில் எனது முதல் பங்களிப்பை வழங்க அழைக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் அடக்கமும் கொள்கின்றேன். முதலில், சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட உங்களை வாழ்த்த விரும்புகிறேன், இந்த பாராளுமன்றத்தில் உங்கள் வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறேன். இந்த உயரிய பாராளுமன்றத்திற்கான எனது பயணம் எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஆனாலும், இந்தப் பயணம், வெற்றியை நோக்கி நன்கு சித்தரிக்கப்பட்ட மனச்சித்திரம் கொண்டு…

Read More