Headlines

இனரீதியான பழிவாங்கலா இடம்பெறுகின்றது ? றிஷாட் பாராளுமன்றில் கேள்வி

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அது இனரீதியாக செயற்படுவதாகவே தோன்றுகின்றதென  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் எம் .பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர் கூறியதாவது, இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர், மன்னார் அரசாங்க அதிபராக இருந்த முஸ்லிம்  ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் , வவுனியாவில் முஸ்லிம் ஒருவருக்கு இந்தப்பதவி வழங்கப்பட்டது. மூன்று இனங்களும்…

Read More

மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்திற்கு மக்கள் காங்கிரசின் தலைவரின் நிதி ஒதுக்கீட்டில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கிவைப்பு..!

மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள ஒரேயொரு பாடசாலை கமு/அல் – அஷ்ரப் மகா வித்தியாலயமாகும்.இங்கு தரம் ஒன்று தொடக்கம் சாதாரண தரம் வரையான வகுப்புக்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகிறது. இப்பாடசாலையில் கல்வி கற்ற பல மாணவ மாணவிகள் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், சமூகத்தில் உயர் அரச பதவிகளிலும் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமின்றி இப்பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை ரீதியிலும், மாகாண மட்ட ரீதியிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஊருக்கும், பாடசாலைக்கும் பெறுமைபெற்றுத்தந்துள்ளனர். இருந்த போதிலும்…

Read More

பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு உடன் தீர்வுகாணுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!!!

வவுனியா, பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வுகண்டு, சாளம்பைக்குளம் உட்பட சுற்றுச்சூழவுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் சுக வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, “இந்தப் பிரச்சினை, தீர்வுகாணப்படாமல் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் குப்பைமேட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்தகாலங்களிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த போது, அதிகாரிகள் உறுதிமொழிகளை வழங்கி,…

Read More

ஜிப்ரியின் மறைவு வருத்தம் தருகின்றது றிஷாட் பதியுதீன்!!!

சிரேஷ்ட அறிவிப்பாளரும் சிம்மக்குரலோனுமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு, ஊடக உலகில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார். ஜிப்ரியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்துள்ளதாவது; மரணத்தின் விதிக்கு உட்படாத ஆத்மாக்கள் எதுவும் உலகில் பிறப்பதில்லை. இறைவனின் இந்த விதிக்கு இலக்காகி இன்று ஜிப்ரி அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார். எமது கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட அவர், பன்முக…

Read More

‘சிறுபான்மை சமூகத்தின் தயவின்றி ஆட்சியமைக்க முஸ்தீபு; வாக்குகளை செல்லாக்காசாக்க இடமளிக்க வேண்டாம்’ – அக்கரைப்பற்றில் ரிஷாட்!

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும் பேரினவாதிகளின் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நமது மக்களின் வாக்குகளை செல்லாக்காசாக்கும் சதி முயற்சிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஹனீபா மதனி தலைமையில், அக்கரைப்பற்றில் நேற்று மாலை (18) இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் நிந்தவூர்…

Read More

கட்சிப்பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான சந்தர்ப்பம். -மன்னார், மாந்தையில் மக்கள் காங்கிரஸ் தலைவர்!

கட்சிப்  பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக்  காலகட்டத்தை நாம் பார்க்கவேண்டி இருக்கின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (16) மாலை நடந்த இந்த சந்திப்பின்போது மாந்தை மேற்கு பிரதேசபை தவிசாளர் செல்லத்தம்பு,மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர், கட்சியின் முக்கியஸ்தரான  அமீன் உட்பட பல பிரமுகர்கள் உடனிருந்தனர். அதிகாரத்தோடும் பதவியோடும் இருக்கின்றபோது எம்முடன்…

Read More

முல்லைத்தீவு மக்களுடன் முன்னாள் அமைச்சர் றிஷாட் கலந்துரையாடல்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று (15/01/2020) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். அங்கு தமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் விரிவாக பேசினார். எதிர் வரும் பொதுத்தேர்தலில் கட்சி எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பில் ஆதரவாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். -ஊடகப்பிரிவு-

Read More

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தேவையற்ற வீதி சோதனை சாவடிகளை அகற்றி பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்தும் கிண்ணியாவில் உள்ள சிற்பி தொழில்களை செய்ய அனுமதியளியுங்கள்_பாராளுமன்றத்தில் அப்துல்லாஹ் மஃறூப் எம்.பி

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தேவையற்ற வீதி சோதனை சாவடிகளை அகற்றுவதுடன் பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்தும் நிம்மதியாக வாழ வழி விடுங்கள் என தெரிவித்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் கிண்ணியாவில் உள்ள சிற்பி தொழிலாளர்களுக்கான அனுமதியினை முன்னையவாறு பிரதேச செயலாளருக்கு அதன் நிருவாக முறையையையும் வழங்க வேண்டும் . பாதுகாப்பு படையினர் சிற்பி தொழிலாளர்களிடம் கைப்பற்றிய பொருட்களை அவர்களிடம் மீள ஒப்படையுங்கள் எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கேட்டுக் கொண்டார். பிரேரனை ஒன்றின் போது நேற்று…

Read More

தோப்பூர் அல் ஹம்ரா மத்திய கல்லூரியின் ஆறாந்தர புதிய மாணவர் அனுமதி ஆரம்ப நிகழ்வு

தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் ஆறு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா இடம் பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர்  வட்டாரக் குழு தலைவர் முஜாஹித் தலைமையில் இன்று (06) நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரும்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினரை உற்சாக வரவேற்பளித்தார்கள். பாடசாலை வளாகத்தில் இதன் போது மரம்…

Read More

தோப்பூர் நூரிய்யா அறபுக் கல்லூரிக்கு புதிய நிருவாக கட்டிடமும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வும்

தோப்பூர் நூரிய்யா அறபுக் கல்லூரிக்கான புதிய நிருவாகக் கட்டிடமும், தளபாடங்கள் கையளிக்கும் வைபவமும் இன்று இடம் பெற்றது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தோப்பூர் வட்டாரக் குழு தலைவரும் முன்னால் வேட்பாளருமான முஜாஹித் தலைமையில் இடம் பெற்ற இவ் வைபவத்தில் முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்தரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார் பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா செலவில் நிருவாக அலுவலகமும்…

Read More

விஜேதாச ராஜபக்சவின் வெட்டுப் புள்ளி தொடர்பான பிரேரனை தோற்கடிக்கப்படும்,சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பு_ முன்னால் துறை முகங்கள், கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் எம்.பி

முன்னால் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் கொண்டுவரப்படுகின்ற பிரேரனைகள் தோற்கடிக்கப்படும் 19 ஆவது திருத்தங்கள் 20,21 ஆவது திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்பது நாடாளுமன்றில் தோற்கடிக்கப்படும் என முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். முள்ளிப்பொத்தானையில் இன்று (05) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் இவரினால் கொண்டு வரப்படும் விகிதாசார தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களின்…

Read More

“மீள்குடியேற்றம் மற்றும் தீர்வு முயற்சிகள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை” பாராளுமன்றில் ரிஷாட்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உட்பட நிரந்தரமான தீர்வு முயற்சிகள் குறித்து, ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் குறிப்பிடப்படாமை வேதனையளிப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்கள் குறித்த சரத் பொன்சேகாவின் உரை கண்டனத்துக்குரியது எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்  ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, “ஜனாதிபதியின் அக்கிராசன உரையிலே சொல்லப்பட்ட நல்ல விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். நானும் எனது கட்சியும்…

Read More