Headlines

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு..!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், மக்கள் காங்கிரஸ் சார்பில், புத்தளம் மாவட்டத்தில், முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள், இன்று (29) தும்மோதர, மனிங்கள, காக்கவத்த, மாதம்பை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றன. குறித்த நிகழ்வுகளில் மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் உட்பட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் பாலர் பாடசாலை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம் மாவட்டத்தின், தும்மோதர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ் ஷிபா பாலர் பாடசாலையை, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் இன்று (29) பார்வையிட்டனர்.

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொட்டறாமுல்லையில்..!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, கொட்டறாமுல்லை பிரதேசத்தில் இன்று (29) நடைபெற்றது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Read More