Headlines

பதூரியா, மாஞ்சோலை, அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் முதன்மை வேட்பாளர் அமீர் அலிக்கு ஆதரவு!

மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலிக்கு, பதுரியா, மாஞ்சோலை, அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. கழகத் தலைவர் சாஜஹான் ஏகமனதாக இந்த அறிவிப்பை விடுத்தார். அத்துடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமது கழகம் பூரணமான ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில், முதன்மை வேட்பாளர் அமீர் அலி அவர்கள் பங்கேற்று உரையாற்றியதுடன்,  பிரதேச சபை உறுப்பினர் நெளபர், செயலாளர்…

Read More

“சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைவால் சமூக அபிலாஷைகளை வெல்ல முடியும்”– முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான், எங்களுக்குள் ஒரு புல்லுருவி கோடாரிக் காம்பு இருந்தமை தெரியவந்தது என்றும் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு இவரே காரணம் எனவும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.  கிண்ணியா, ரஹ்மானியா பகுதியில், கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “விகிதாசார…

Read More

“சமூகத்தின் குரலாக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பேரினவாதத்தின் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்”– வேட்பாளர் அஷ்ரப் தாஹிர்!

நமது சமூகத்தின் குரல், மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் சமூகத்தின் குரலாக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால், இந்த அரசினதும், பேரினவாதத்தினதும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார் என மக்கள் காங்கிரஸின், திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர் கூறினார். நிந்தவூர், வன்னியார் வட்டாரத்தில் நடைபெற்ற. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். வேட்பாளர் அஷ்ரப் தாஹிரை ஆதரித்து நடைபெற்ற இக்கூட்டம், பிரதேச சபை பட்டியல் வேட்பாளர் கே.எல்.றபீக்…

Read More

“சமூக இருப்புக்கான தேர்தல் இது” – சிந்தித்து வாக்களிக்குமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

சமூகத்துக்கான தேவைகளை ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்து பெறும் நிலைமையை மாற்றி, எமது காலடிக்குக் கொண்டுவரும் சமூகப் பலத்தை அதிகரிக்க ஒன்றுபட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பொதுத்தேர்தல் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, நமுவாவ கிராமத்தில் நேற்று மாலை (22) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்,…

Read More