Headlines

ரிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா? – எஸ்.ரத்னஜீவன் எச். ஹூல்!

இந்த நாட்டில் ஜனநாயக அரசா அல்லது பொலிஸாரின் அரசா செயற்படுகிறது?  எஸ்.ரத்னஜீவன் எச். ஹூல்! (தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் எழுதிய கட்டுரையில் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வெளிவந்த கருத்துக்களின் தொகுப்பு) இந்த நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், ஜனநாயக நிறுவனங்களை ஆதரிப்பதற்காகவுமே எங்களிடம் காவல்துறை உள்ளது.  துரதிஷ்டவசமாக,  காவல்துறையினர், அதிகாரத்துடன் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் கைகளில் உள்ள ஒரு கருவிபோல் ஆபத்தான அறிகுறிகள் காணப்படுகின்றன.  இது நமது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது போல, இது…

Read More

“மக்கள் காங்கிரஸின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், எம்மீது அபாண்டங்களை அள்ளி வீசுகின்றனர்” – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், எங்கள் மீது அபாண்டங்களை அள்ளி வீசுகின்றனர் என்று திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸின், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வை.கே.ரஹ்மானை ஆதரித்து, மருதமுனையில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார். மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகப் பங்கேற்ற குறித்த கூட்டத்தில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள்,…

Read More

“சமூகப் பிரச்சினைகளை தீர்க்க வக்கில்லாது தேர்தல் காலத்தில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்” – சம்மாந்துறையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அதிகாரங்கள் இருந்த போது சமூகப் பிரச்சினைகளை பிரச்சினைகளாகவே வைத்திருந்துவிட்டு, தேர்தலில் மட்டும் அதே பிரச்சினைகளை தீர்த்துத் தருவதாகக் கூறி வாக்குக் கேட்பவர்களை நிராகரிக்க வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்  மாஹிரை ஆதரித்து, சம்மாந்துறையில் (19) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ரிஷாட், “கடந்த பொதுத்…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்  பதியுதீனை ஆளுந்தரப்பு நெருக்குதலுக்குள்ளாக்குவது வேதனையளிக்கிறது” – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, இந்தத் தேர்தல் காலத்தில் அடிக்கடி விசாரணைகளுக்கு  அழைப்பது மற்றும் கைது செய்ய முனைவது போன்ற நெருக்குதல்களை ஆளுந்தரப்பிலிருந்து  மேற்கொள்வதானது, பெரும் மனவேதனை அளிப்பதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் திருகோணமலை தொகுதி அமைப்பாளருமான ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (20) கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களை பெறுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் இடம்பெறும் போது,…

Read More