Headlines

தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தாலிப் அலி தெரிவு!

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எச்.தாலிப் அலி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில், இன்று (20) தம்பலகாமம் பிரதேச சபையின் சபா  மண்டபத்தில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவின் போது, சக உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் ஏகமானதாக தாலிப் அலி தெரிவானார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உப தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார முன்மொழிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்…

Read More

காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி, காத்தான்குடி, கர்பலா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். முதன்மை வேட்பாளர் அமீர் அலி அவர்களை ஆதரித்து இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது, மு.கா ஆதரவாளர்கள் சிலர் மக்கள் காங்கிரஸில்  இணைந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் நகர சபை உறுப்பினர் முகைதீன் சாலி, முன்னாள் நகர சபை உறுப்பினர் மாஹிர், மத்திய குழு செயலாளர்…

Read More

“மொட்டுக் கட்சியில் கோடாரிக் காம்புகள் களமிறக்கப்பட்டுள்ளார்கள்” – முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கி வாக்குகளுக்காக தேர்தல் காலங்களில் செயற்படுகிறார்கள். இதன் ஊடாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற முயற்சிக்கிறார்கள் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை  வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப்  தெரிவித்தார். கிண்ணியா, மாஞ்சோலை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை கொரோனா என்ற போர்வையில் எரித்தார்கள். உலக சுகாதார ஸ்தாபனம் சொல்கின்ற போதும்,…

Read More

‘மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன’ – வஃபா பாறுக்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன. தேர்தல் ஆணையகத்தின் பரிந்துரையை குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பழி வாங்குவதிலேயே அதிகார வெறியர்கள் கரிசனை காட்டுகின்றார்கள். சிறையில் அடைப்பதால் ஏற்படவிருக்கும் லாப நட்ட கணக்கில் தெளிவின்மையால், இன்னும் கைது செய்யாமல் விசாரனை என்ற பெயரில் பாரிய உளவியல் தொல்லைக்குள்ளாக்குகின்றார்கள். ரிஷாட் பதியுதீனை கைது செய்வதால், சில ஆயிரம் இனவாத வாக்குகளை அதிகரித்துக்கொள்ளலாம் என நிச்சயமானால், அவரை…

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான விசாரணையினை ஆகஸ்ட் 10 இன் பின்னர் மேற்கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்..!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணையினை பிற்போடுமாறும் அல்லது 10. 08. 2020 இன் பின்னர் மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இருவரும் இணைந்து, கையொப்பமிட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளனர். இம்மாதம் ஜூலை 15 ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் மீது ஆணைக்குழு எடுத்துள்ள இந்தத் தீர்மானத்தினை…

Read More