Headlines

கற்பிட்டியில் இன்று என்ன நடந்தது..? – வேட்பாளர் ஆப்தீன் எஹியா விளக்கம்!

புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கௌரவமாக பெற்றுக்கொடுக்க, என்ன சவால்கள் வந்தாலும் அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடத் தயாராக இருப்பதாக தராசுக் கூட்டணி வேட்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார். கற்பிட்டியில் இன்று பிற்பகல் (16) தராசுக் கூட்டணி வேட்பாளர் ஆப்தீன் எஹியா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பில், முகநூல் ஊடாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இதுதொடர்பில் விளக்கமளித்த அவர்…

Read More

சேதாரம் இல்லாத மாற்றத்துக்கு கை கோர்ப்போம்..!

திகாமடுல்ல மாவட்டத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையால் தவிர்க்க முடியாத ஒரு ஆபத்து எப்போதுமே இருக்கும். மாவட்டத்தின் பல்லின மக்கள் விகிதாசாரத்துக்கு சமனான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்வதில் சங்கடங்களுண்டு. 1989ல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் இந்த சவாலை எதிர்கொள்ளவே, வாக்குகளை ஓரணியில் திரட்ட மர்ஹூம் அஷ்ரஃப் முயற்சி செய்தார்.  மர்ஹூம்களான A.R.மன்சூர், B.A.மஜீத் போன்ற செல்வாக்கு மிக்க அரசியல் தலைமைகள், போட்டியிடாமல் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்று வியூகம் வகுத்தார். என்றாலும், அந்த வியூகத்தையும் மீறி, தேர்தல் முடிவு எதிர்பார்ப்புக்கு மாற்றமாக வெளியானது….

Read More

‘கல்முனை பிரச்சினை; தீர்க்கப்பட முடியாத ஒன்றல்ல’ – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

“கல்முனை பிரச்சினை என்பது தீர்க்கப்பட முடியாத ஒன்றல்ல. தமிழ் தரப்பு மக்கள், அரசியல்வாதிகளுக்கும் இதன் உண்மை நிலையை உணர்த்துவதற்கு அதிகாரத்திலிருந்தவர்கள் முயற்சிக்கவில்லை. அதனால்தான் தேர்தல்கால பிரச்சாரத்திற்காக இதனை எல்லோரும் பயன்படுத்துகின்றார்கள்” என்று மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். கல்முனையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்று உரையாற்றிய வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் கூறியதாவது, “கல்முனை விடயத்தில் பூரணமாக அறிவில்லாத போது, அதுசார்ந்த வரலாறு தெரிந்தவர்களுடன் கலந்தாலோசித்து, ஆகக்குறைந்த அறிவுடனாவது குறித்த விடயத்தில், அதிகாரத்தில் இருந்த…

Read More

அட்டாளைச்சேனை; உங்கள் வாக்கு அம்பாறை மாவட்டத்துக்கு வரமாக அமையுமா அல்லது சாபமாக அமையுமா..?

எமது வாக்குகள் மிகப் பெறுமதியானவை. எமது வாக்குகளை நாம் சரியான முறையில் பயன்படுத்த தவறினால், மிகப் பெரும் விலை கொடுக்க நேரிடும். இத்தனை நாளும் எப்படி வாக்களித்தோம் என்பது பற்றி சிந்தித்து பயனில்லை. இனி யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்பது சிந்தித்தேயாக வேண்டும். எமது சமூகம் மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் உள்ளது. அட்டாளைச்சேனையில் மு.காவில் நஸீரும், தே.காவில் பழீல் பீ.ஏயும், அ.இ.ம.காவின் சட்டக் கலாநிதி கபூரும் போட்டியிடுகிறார்கள். நான் அட்டாளைச்சேனை வேட்பாளர்களை இங்கே விழித்துள்ள முறையே,…

Read More

“அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்” – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில், இன்று (16) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அதுல்லாஹ் மஹ்ரூப், மேலும் கூறியதாவது, “சமூகம்சார் அரசியல் நலன்களை முன்னெடுக்கும் சிறுபான்மைத் தலைவர்களை, ராஜபக்ஷக்களின்…

Read More