கற்பிட்டியில் இன்று என்ன நடந்தது..? – வேட்பாளர் ஆப்தீன் எஹியா விளக்கம்!
புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கௌரவமாக பெற்றுக்கொடுக்க, என்ன சவால்கள் வந்தாலும் அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடத் தயாராக இருப்பதாக தராசுக் கூட்டணி வேட்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார். கற்பிட்டியில் இன்று பிற்பகல் (16) தராசுக் கூட்டணி வேட்பாளர் ஆப்தீன் எஹியா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பில், முகநூல் ஊடாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இதுதொடர்பில் விளக்கமளித்த அவர்…
