Headlines

சம்மாந்துறையின் பிரதிநிதித்துவ காப்பிற்கு மாஹிரே பொருத்தமான தெரிவு..!

சம்மாந்துறை என்பது 45 000 இற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட ஒரு பிரதேசம். இதில் 7000 தமிழ் மக்களது வாக்குகள் உள்ளன. முஸ்லிம் வாக்குகள் 38,000 உள்ளன. இத்தனை பெரும் வாக்கு வங்கியை கொண்ட சம்மாந்துறை மண் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழப்பதென்பது மிகவும் கவலையான விடயம். எமது வேட்பாளர்கள் ஒன்றும் ஏனைய ஊர் வேட்பாளர்களுக்கு எதிலும் சளைத்தவர்களுமல்ல. இம் முறை அ.இ.ம.கா குறைந்தது ஒரு ஆசனத்தையாவது பெறக் கூடிய வாய்ப்புள்ளது. அந்த ஆசனத்தை நோக்கி நாம் காய்…

Read More

புத்தளம்; சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம் – தோப்பு வீழ்ந்து தோழமையானது..! – சுஐப் எம்.காசிம் –

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூகத்தின் ஆக்கபூர்வ அரசியலுக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த இணக்கப்பாட்டு அரசியல் அம்பாரை மாவட்டத்தில் எட்டப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்திலிருந்துதான் இந்த இணக்க அரசியல் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை எந்தக் கட்சிகளிலிருந்தாவது இங்கு முஸ்லிம்கள் தெரிவாகச் சந்தர்ப்பம் இருந்ததால், புத்தளம் மாவட்டம் இணக்க அரசியலுக்கான மையமாகப் பார்க்கப்பட்டுள்ளதாக இம்முயற்சியை நோக்குவோம். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் புத்தளம் நான்காம் இடத்திலுள்ளதே, இங்கு…

Read More

“இனவாதத்தை கிளப்பி தெற்கில் படம்காட்டி வாக்குச் சேகரிக்க முற்படுகின்றனர்” – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

தெற்கில் படம் காட்டி இன துவேசத்தை கிளப்பி வாக்குகளை சேகரிக்க முற்படுகிறார்கள் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சி எட்டுக்கும் குறையாத ஆசனங்களை பெறுகின்ற போது, கவனத்தை ஈர்க்கும். ஆகஸ்ட் ஆறாம் திகதிக்குப்…

Read More

“எவரையும் தோற்கடிப்பது எமது நோக்கல்ல; மக்கள் சேவையே எம் இலக்கு” – வேட்பாளர் அஷ்ரப் தாஹிர்!

“எவரையும் தோற்கடிக்கும் நோக்கத்துடன் நான் தேர்தலில் களமிறங்கவில்லை. மக்கள் சேவை ஒன்றையே எனது நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என்று திகாமடுல்ல மாவட்ட, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுத்தேர்தல் வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் கூறினார். நிந்தவூர் வன்னியார் வட்டாரத்திற்கான தமது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில் “நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மூன்று முறை இருந்து,…

Read More

“பிரதம வேட்பாளர்களின் வியூகங்கள் கூட புத்தளத்தில் கேள்விக்குறியாகியுள்ளன” – வேட்பாளர் ஆப்தீன் எஹியா தெரிவிப்பு!

பிரதம வேட்பாளர்களின் வியூகங்கள் கூட புத்தளம் தொகுதியில் கேள்விக்குறியாகியுள்ளன என்றும் தராசுக் கூட்டணி சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஒன்றுக்கான முயற்ச்சி இரட்டிப்பாக மாறலாம் எனவும் பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா நம்பிக்கை தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பொதுவான காரியாலயம் (09) புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் திறந்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மாகாண…

Read More