Headlines

“பொய் வாக்குறுதிகளை கூறி வாக்குக் கேட்பவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும்” – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

தேர்தலுக்காக பொய் மூட்டைகளுடனும் பண மூட்டைகளுடனும் வருகின்றவர்களை புறக்கணித்து, தகுதியானவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் எனவும், பொய் வாக்குறுதிகளை கூறி வாக்குக் கேட்பவர்களுக்கு இம்முறை தகுந்த பதிலடி கிடைக்கும் என்றும் முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். அம்பாறை, மாளிகைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மேலும் கூறியதாவது, “நீங்கள் என்ன சேவையை செய்தீர்கள். இப்போது வாக்கு கேட்டு வருகிறீர்கள்? என்று சிலர்…

Read More

“மீரா விளையாட்டுக் கழக” அங்குரார்ப்பண நிகழ்வும், சீருடை அறிமுகமும்!

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, மீராவோடை பகுதியில் இயங்கி வரும் ‘மீரா விளையாட்டுக் கழக’ அங்குரார்ப்பண நிகழ்வும், கழக சீருடை அறிமுகமும், மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் (9) இடம்பெற்றது. கழகத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, கழக சீருடை, கழக சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அத்துடன்,…

Read More

“தமிழ் சமூகம் அனுபவிக்கும் அவலங்கள் முஸ்லிம் சமூகத்துக்கும் நேர்ந்துவிடக் கூடாது” – வன்னி மாவட்ட வேட்பாளர் பகீரதன்!

தமிழ்ச் சமூகம் தலைமையை இழந்து, தவிப்பதைப் போன்று சகோதர முஸ்லிம் சமூகமும் வேதனை படக்கூடாதென்று, வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் த.பகீரதன் தெரிவித்தார். “முஸ்லிம்களாகிய நீங்கள் பிரிந்துவிடாதீர்கள். ஒற்றுமையாக பயணியுங்கள். வெவ்வேறு கட்சிகளுக்கு முண்டுகொடுப்பதையும், அரசுக்கு முட்டுக்கொடுப்பதையும் தயவுசெய்து கைவிடுங்கள். சிறிய சிறிய பிரச்சினைகளை பெரிதுபடுத்திக்கொண்டு, மாற்றுக் கட்சிகளுடன் இணைந்து, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அரசியல் செய்வதை கைவிடுங்கள். அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில், சிறுபான்மை சமூகங்கள் தங்கள் இருப்புக்களை…

Read More

“திகாமடுல்ல வாக்காளப் பெருமக்களே..!” – ஹனீபா மதனியின் மடல்!

உங்கள் அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும்..! சமூக சேவைகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்த நான், அரசியலுக்குள் நுழைந்து இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், திகாமடுல்ல மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில், 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன். இவ்வேளை, இறைவன் எனக்கு சமூக சேவைகளில் ஏற்படுத்தித் தந்த பொன்னான சில சந்தர்ப்பங்களை நினைவு மீட்டிப் பார்க்கிறேன். விடுதலை புலிகளினால் மூதூர் மக்கள் அகதியாக்கப்பட்ட போது, கிழக்கிலங்கை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவராக…

Read More

“நாங்கள் இனவாதிகளோ, பிரதேசவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்லர்; உரிமைகளுக்காகவே ஒன்றுபட்டுள்ளோம்” – வேட்பாளர் ஆப்தீன் எஹியா!

நாங்கள் இனவாதிகளோ,  பிரதேசவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்லர். எம்மிடமிருந்து அதிகாரத்தால்  பறித்தெடுக்கப்பட்ட, நாம் இழந்த எமது உரிமைகளை மீட்டெடுக்க ஒற்றுமைப்பட்டவர்களே என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், தராசுக் கூட்டணியில், இலக்கம் 7 இல் போட்டியிடும் வேட்பாளர் ஆப்தீன் எஹியாவை ஆதரித்து, முதலைப்பாளியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய வேட்பாளர் ஆப்தீன் எஹியா, “30 வருடங்களாக நாம் பெரும்பான்மை…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைமையின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும்” –  முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும் என மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளரான அப்துல்லாஹ் மஹ்ரூப், நேற்று முன்தினம் (09) கந்தளாயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், எமது உரிமைகளைப் பாதுகாத்து,  வென்றெடுக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமனறம் அனுப்ப…

Read More