“பொய் வாக்குறுதிகளை கூறி வாக்குக் கேட்பவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும்” – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!
தேர்தலுக்காக பொய் மூட்டைகளுடனும் பண மூட்டைகளுடனும் வருகின்றவர்களை புறக்கணித்து, தகுதியானவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் எனவும், பொய் வாக்குறுதிகளை கூறி வாக்குக் கேட்பவர்களுக்கு இம்முறை தகுந்த பதிலடி கிடைக்கும் என்றும் முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். அம்பாறை, மாளிகைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மேலும் கூறியதாவது, “நீங்கள் என்ன சேவையை செய்தீர்கள். இப்போது வாக்கு கேட்டு வருகிறீர்கள்? என்று சிலர்…
