Headlines

கிண்ணியா நகர சபை NFGG உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் (NFGG) கிண்ணியா நகர சபை உறுப்பினர்உமர் றழி ரனீஸ், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களுடன் இன்று (04) உத்தியோகபூர்வமாக தனது ஆதரவாளர்களுடன் இணைந்துகொண்டார்.   திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில், முதன்மை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் பயணத்தில் இணைந்து கொண்ட உமர் அலி ரனீஸ், பொதுத் தேர்தலின் போது…

Read More

‘கல்முனை தொகுதியில் மக்கள் காங்கிரஸ் வரலாறு எழுதும் காலம் கனிந்துள்ளது’ – சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இம்முறை கல்முனை தொகுதியை வெற்றிகொண்டு வரலாற்றுச் சாதனை படைக்கும்  என்று மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளரும் கட்சியின் ஸ்தாபக செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். தனது கல்முனை அலுவலகத்தில் நேற்று (03) இடம்பெற்ற விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது, அவர் மேலும் கூறியதாவது, “கடந்த தேர்தலில் எவ்வித அதிகாரமும் இல்லாது, அம்பாரை மாவட்டத்தின் சகல ஊர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வியாபிக்கச் செய்ததன்…

Read More

“வாக்குரிமை விடயத்தில் இறைவனை பயந்துகொள்ளுங்கள்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

முப்பது வருட காலங்களாக அரசியலில் கோலோச்சியவர்கள், தேர்தல் வந்தவுடன் அரிசிப்பொட்டலங்களுடனும், பணமூட்டைகளோடும் வீடுவீடாக வருவதென்பது, அவர்களது அரசியல் வங்குரோத்தை எடுத்துக் காட்டுவதாக மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். ஏறாவூர், மீராகேணி மற்றும் ஓட்டுப்பள்ளி பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டு, கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இப்பொழுது தேர்தல் வந்தவுடன், ஏறாவூர் பற்றுக்கு பாடசாலை தருகிறோம், வீதி தருகிறோம், பூங்கா தருகிறோம் என…

Read More

வடபுல அகதி முஸ்லிம்களின் விடிவுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் என்ன செய்திருகின்றார்?

முசலிப் பிரதேசத்தின் பாலைக்குளி, கரடிக்குளி, சிலாவத்துறை, கொண்டச்சி, மறிச்சுக்கட்டி உள்ளிட்ட ஏனைய கிராம முக்கியஸ்தர்கள், சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு… ! “20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர், வடக்கில் அமைதிச் சூழல் ஏற்பட்டதனால் மீளக்குடியேறும் ஆர்வத்திலும், எண்ணத்திலும் முசலிப் பிரதேசத்துக்கு நாங்கள் வந்த போது, இந்தப் பிரதேசம் இருந்த…

Read More