‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ – மன்னாரில் சஜித் பிரேமதாஸ!
கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செய்வதே அதன் நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமேதாஸ குற்றஞ்சாட்டினார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (01) மன்னார், தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “முஸ்லிம் தலைவர்கள் எவராவது குற்றமிழைத்திருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்த…
