‘ஞானசார தேரர் குற்றஞ்சாட்டுபவர்கள் அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்து, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!
இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஞானசார தேரரின் மோசமான, பிழையான கருத்துக்களை சில ஊடகங்களும் தூக்கிப்பிடித்துகொண்டு காவித் திரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான செயற்பாடுகளினால் பெரும்பான்மையின மக்கள், இந்த நாட்டில் ஆயிரம்…
