“சவால் நிறைந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் அதிகரித்த பிரதிநிதித்துவமே நன்மை பயக்கும்” – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!
காலாகாலமாக அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்தவர்கள், வென்று பாராளுமன்ற கதிரையை சூடாக்கியதை தவிர வேறு எந்த உரிமையையும் இம்மாவட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல வேட்பாளர் வை.கே.றஹ்மான் தலைமையில், மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலாவதாக களமிறங்கியபோது, குறிப்பிட்ட வாக்குகளை அளித்து மக்கள் எங்களுக்கு ஆதரவினை வழங்கினர். ஆனால், கடந்த முறை…
