Headlines

சாட்சியமளிக்க அனுமதி கோரி, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்!

பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் அவர்களினூடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ரிப்கான் பதியுதீனின் சட்டத்தரணி அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளர் ஒருவர், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய…

Read More

மு.க வின் தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை  உறுப்பினர் ஹமீட் றஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் . திருகோணமலை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அப்துல்லா மஹ்றூபை ஆதரித்து, முள்ளிப்பொத்தானை நகரில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ. நஜீமுல்லாஹ்வின் தலைமையில், நேற்று (25) நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பின் போது, குறித்த மு.கா…

Read More

மு.கா வின் மாவடிப்பள்ளி ஆரம்பகால போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த ஆரம்பகால போராளிகள் சிலர், அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதின், கடந்த 22, 23 ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மாவடிப்பள்ளிக்கு வருகை தந்த அவரை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வொன்று, மாவடிப்பள்ளி மத்திய குழு மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜலீல் ஆகியோரின் ஏற்பாட்டில் ( 23 )…

Read More

‘நியாயம் வெல்லட்டும்’ – வை.எல்.எஸ்.ஹமீட்!

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் இத்தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் காங்கிரஸ்தான் தடுத்தது” என்ற பிரச்சாரம் தொடராக குறித்த கட்சியினரால் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. பல முகநூல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்னிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டபொழுது “ஆம், சந்தேகமில்லாமல் மக்கள் காங்கிரஸ்தான் அதற்கு உடன்படவில்லை; மட்டுமல்ல, அமைச்சர் பௌசியின் வீட்டில் மார்ச் 13, 16ம் திகதிகளில் மக்கள் காங்கிரஸ் –  முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றிற்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த…

Read More

அரங்கத்துக்குள் அந்தரங்கம் – நவமணி!!!

இலங்கை முஸ்லிம்களது அரசியல் வரலாற்றில் கடும்போக்கு பெரும்பான்மைச் சக்திகளின் நெருக்குதல்களுக்கான ஓர் அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காணப்படுகின்றார். வன்னியைத் தளமாக ஆரம்பித்து, சமூகத்துக்கான பணியைச் செய்யத் தலைப்பட்ட இந்தத் தலைமைக்கு, பேரினவாதிகளின் நெருக்குதல்கள்தான் பெரும் விளம்பரங்களாகி வருவதாக, ஏனைய தலைமைகள் கிசு கிசுப்பதாகவும் ஊரூராகப் பேச்சு. பெரும்பான்மை மொழி ஊடகங்களில் இவரின் பெயர் சொல்லாத செய்திகள் இல்லை. குற்றம் சுமத்துவதையே தொழிலாகக்கொண்டு இவ்வூடகங்கள் செயற்படுவதாக, சிறுபான்மைத் தளங்களில் பல பேச்சுக்களும் அடிபடுகின்றன. தேர்தல் காலத்தில்…

Read More