Headlines

“சமூகக் குரல்களாக ஒலிக்கக்கூடிய பிரதிநிதிகளை சிறுபான்மையினம் தேர்ந்தெடுப்பது காலத்தின் கட்டாயம்” – முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!  

சமூக அமைதியை குலைக்கக் கூடிய அரசியல் சக்திகளை தோற்கடிக்கும் வகையில், சிறுபான்மை மக்கள் தனது ஜனநாயக சக்தியான வாக்குப்பலத்தை பிரயோகிப்பதுடன், சமூகக் குரல்களாக ஒலிக்கக்கூடிய பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் உறுதியாக இருக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில், இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, “சிறுபான்மை மக்களை குழப்பத்துக்குள்ளாக்கி, பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளை அபரிமிதமாக பெறும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள், அரசியல் களத்தில்…

Read More

“நீதிமன்றில் தெரிவிக்க வேண்டியவைகளை ஊடகங்களில் மாத்திரம் பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பது ஏன்? “ – முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நீதிமன்றுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்களை, அங்கு தெரிவிப்பதை விடுத்து, ஊடகங்களில் மாத்திரம் பொய்யான தகவல்களை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சகோதரர் ரியாஜின் கைது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு நேற்று (20) பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “தற்கொலைதாரி இன்ஷாப் அஹமட், எனது சகோதரருக்கு கடந்த வருடம் ஆறு உள்வரும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருக்கிறார். அந்த குற்றச்சாட்டின்…

Read More

“சிறுபான்மையினரின் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய, இன ஒற்றுமையை வலியுறுத்தக்கூடியவர்களை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும்” – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப்!

சிறுபான்மை சமூகத்துக்காக குரல் கொடுக்கக்கூடிய, நில அளவை, காணி அபகரிப்பு போன்ற எமது உரிமைகளுக்காக போராடக்கூடிய ஒரு பிரதிநிதியை, இந்த மண்ணுக்கு தெரிவுசெய்ய வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஃறூப் தெரிவித்தார். தோப்பூர் – ஆஸாத் நகர் பகுதியில், நேற்று (20)மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர்  இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இன ஒற்றுமையை வலியுறுத்தக்கூடியதும் தமிழ், முஸ்லிம்கள்…

Read More

‘பதவிகளை விலை கொடுத்து வாங்கும் கலாச்சாரம் என்னிடம் இல்லை’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

கடந்த 15 வருடங்களாக மேற்கொண்ட ஹலாலான முயற்சிகளுக்கும், ரமழான் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டு செயற்பாடுகளுக்கும் உபகாரமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முண்ணணி கூட்டணியை இறைவன் பரிசளித்துள்ளதாக, மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். நேற்று (20) காத்தாண்குடி, பீச் வே ஹோட்டலில் இடம்பெற்ற  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முண்ணணி புரிந்துணர்வு கூட்டத்தில் உரையாற்றிய போதே,…

Read More

“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

பொத்துவில்லில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களிடம் எதுவுமே தெரிவிக்காது, திடீரென அந்தப் பிரதேசத்துக்குச் சென்று, காணிகளை அளவீடு செய்வதும், அந்த இடத்தில் பாதுகாப்பு படையினரையும் கொண்டுசென்று, மக்களை பீதிக்குட்படுத்தும் தொல்பொருளியல் திணைக்களத்தின் செயற்பாடுகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “பொத்துவில் பிரதேசத்தில் காணி அளவீடு செய்வதற்கு முஷர்ரப் என்பவர் தடையாக இருப்பது நியாயமா?” என ஊடகவியலாளர் ஒருவர், நேற்று (20) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கேள்வி எழுப்பியபோதே, அவர் மேற்கண்டவாறு…

Read More

‘சிறுபான்மையின மக்களை புறக்கணித்துள்ள செயலணி, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல’ – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூப்!

தொல்பொருளைப் பாதுகாக்க ஜனாதிபதி செயலணியை உருவாக்கியதன் மூலம், தேர்தல் காலத்தில் சிறுபான்மையின மக்களைப் புறக்கணித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாதென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான  அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே, அவர்  மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசாங்கம் மூவின மக்களையும் புறக்கணித்து,  ஜனாதிபதி செயலணியை உருவாக்கி, தேர்தல் காலத்தில் செயற்படுவது அவசியமானதா? அத்தோடு சிறுபான்மை மக்களை புறக்கணித்து இவர்கள் செயற்படுகின்றார்கள். அரசாங்கத்தினால் …

Read More

அஷ் ஷெய்க் எஸ். எல். எம். ஹனீபா மதனி அவர்களுக்கு தேசிய அரசியலில் பங்களிப்புச் செய்யும் தகமையுள்ளதா?

முஸ்லிம் சமூகத்திலுள்ள சிவில் செயற்பாட்டாளர் ஒருவரின் கருத்து? அக்கரைப்பற்று மண்ணின் மைந்தன் அஷ் ஷெய்க் எஸ். எல். எம். ஹனீபா மதனி மூத்த உலமாக்களில் ஒருவராக, ஆசிரியராக, மதீனா சர்வதேச பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாக, வர்த்தகராக, பதிவு செய்யப்பட்ட அரச ஒப்பந்தக்காரராக, சமூக சேவையாளராக பல்வேறு பரிமாணங்களை அடைந்து அதனால் அல்லாஹ்வின் உதவியினால் அம்பாறை மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனத் தலைவராக 2005ல் தெரிவு செய்யப்பட்டு சிவில் சமூக செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தப்பட்டார். இத்தகைய இவரது பின்புலம், அறிவு, அனுபவம் என்பன…

Read More

‘கல்குடாவின் பிரதிநிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படுவதென்பது, நீண்ட பரம்பரைக்கு கால்கோளாக அமையும் மிகப்பெரிய முயற்சியாக மாறும்’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

கல்குடாவின் பிரதிநிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படுவதென்பது நீண்ட பரம்பரைக்கு கால்கோளாக அமையும் மிகப்பெரிய முயற்சியாக மாறும் எனவும் இதற்காக கடந்த பொதுத்தேர்தலை விட இரட்டிப்பு மடங்கு செய்றபடவேண்டும் எனவும் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பிணர்களுடனான கலந்துரையாடல் நேற்று 20.06.2020 இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியதாவது “கடந்த வருடம் சஹ்ரானுடைய குண்டு வெடிப்பின்…

Read More

‘52 நாள் அரசாங்கத்தில் களவுபோன அரிசி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விளக்கம்’ – முன்னள் அமைச்சர் ரிஷாட்!

“சதொச களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் கொள்ளளவானது, 52 நாள் அரசாங்க காலத்தின்போது குறைந்திருந்தமை தொடர்பில், எனது வேண்டுகோளின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே, நேற்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விளக்கமளித்தேன்” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஊடகவியலாளரிடம் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “2018 டிசம்பர் 20 ஆம் திகதி மீண்டும் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், எனது அமைச்சின் கீழான…

Read More