‘சிறுபான்மையினரின் அரசியல் பலத்தை தகர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்’ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!
சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பலத்தை தகர்ப்பதற்கான பேரினவாத சிந்தனைகளின் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் சிறுபான்மை சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதும் அதன்மூலம், சமூகத்துக்காக குரல்கொடுக்கும் பிரதிநிதிகளின் குரல்வளையை நசுக்குவதுமே இவர்களின் உள்ளார்ந்தத் திட்டம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். முசலியில் நேற்று (01) இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, “வரவிருக்கின்ற பொதுத்…
