Headlines

கிண்ணியா மாகாத் நகர் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்!!!

கிண்ணியா மாகாத் நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகளை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் நேற்று (12.10.2019) ஆரம்பித்து வைத்தார். விளையாட்டு மைதான புனரமைப்புக்காக வர்த்தக வாணிப கைத்தொழில் நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற செயலணி திட்ட அலகு எனும் திட்டத்தில்  20 இலட்சம் ரூபா செலவில்   குறித்த வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இவ்…

Read More

பளிச்சென்று வெளிச்சமாகிறது சம்மாந்துறை பொது மைதானம்

சம்மாந்துறை செந்நெல் கிராமம்-1ல் அமைந்துள்ள பொது மைதான அபிவிருத்திற்காக 17 மில்லின் ரூபா முதல்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் முயற்சியின் பலனாக சம்மாந்துறை பொது மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட ஒதுக்கீடாகவே குறித்த தொகை RIDP திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாரிய தொகை இதன் அடுத்தகட்ட ஒதுக்கீடாக கிடைக்கப்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மைதானத்தின் பல வருடகால குறைபாடுகளைக் கவனத்திலெடுத்து பலராலும் செயற்றிறனுடன் மேற்கொள்ளப்படாமலிருந்த பெருமளவிலான அபிவிருத்தியை இம் மைதானம் காணவுள்ளமை இதன்…

Read More

Executive Committee of CIRDAP இக்கலந்துரையாடல்

Executive Committee of CIRDAP Meeting  விவசாய, நீர்பாசன, கடற்தொழில் நீரியவளஅபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சினால் ஏற்பாட்டில் தாஜ் சமுத்திர ஹோட்டலில் இன்று அமைச்சின் செயலாளர் ருவான் சந்திர தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உத்தியோகபூர்வமாக நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் Dr. Yusharto Huntoyungo Assistant Minister Apparatus and Public services, Dr. அஜந்த டீ சில்வா மேலதிக…

Read More

சூரங்கல் _ முள்ளிப்பொத்தானை வீதி காபட் வீதியாக பிரதியமைச்சரின் அயராத முயற்சியினால் அங்குரார்ப்பணம் செய்து வைப்பு.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த சூரங்கல்- முள்ளிப்பொத்தானை வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான முதல் கட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (.05) துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதியானது 4கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட சுமார் 51 மில்லியன் ரூபா செலவில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் கீழ் இயங்கும்  வீதி அபிவிருத்தி…

Read More

அல் அமான் அறபிக் கல்லூரிக்கான சுற்றுமதிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

கிண்ணியா ஏழுபுளியடி கிராமத்தில் உள்ள அல் அமான் அறபிக் கல்லூரியின் சுற்றுமதில் நிர்மாணிப்புக்காக அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (05) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வர்த்தகவாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற திட்ட செயலணி ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் இச் சுற்றுமதில் நிர்மாண நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. இவ் நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான…

Read More

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் என கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள் மற்றும் நீர்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விழால்ஓடை மற்றும் மூக்கறையான் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டீர்களோ அதுபோன்று எதிர்வரும்…

Read More

உப்புக்களும் நளவன்வாடி கிராமத்திற்கான 10 மில்லியன் நிதியில் பாதை புனரமைப்பு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நகர சபை எல்லைக்குற்பட்ட உப்புக்களும் நளவன்வாடி கிராமத்திற்கான கொங்கிரீட் பாதை புனர்நிர்மான வேலைகள் (2019.10.04) அன்று ஆரம்பிக்கப்பட்டது. 10 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு நகர சபை உறுப்பினர் நகுசீன் அவர்களது தலைமையில் இடம்பெற்றதோடு கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

10 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மூர்வீதி கிராமத்திற்கான புதிய பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர சபை எல்லைக்குற்பட்ட மூர்வீதி கிராமத்திற்கான கொங்கிரீட் பாதை புனரமைப்பு வேலைகள் இன்று(2019.10.03) ஆரம்பிக்கப்பட்டது 10 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு நகர சபை உறுப்பினர் உவைஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றதோடு கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்…

Read More

கிண்ணியா அல் அதான் மகாவித்தியாலயத்துக்கான மைதான நுழைவாயில் திறப்பு மற்றும் நிழற்பட பிரதி வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட கிண்ணியா அல் அதான் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாடசாலையின் அதிபர் அப்துல் அஸீஸ் தலைமையில் நேற்று (27) மாலை பாடசாலை வளாகத்தில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பாடசாலை மைதானத்துக்கான நுழைவாயில்,கிரவிடல் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன புனரமைக்கப்பட்டு கம்பரெலிய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு…

Read More

முந்தயன் ஆறு அனைக்கட்டு அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பான கள விஜயம்   இராஜாங்க அமைச்சர் அமீர் அலி   தலைமையில்.

எதிர் வரும் 05.10.2019 முந்தயன் ஆறு அனைக்கட்டு அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பான கள விஜயம்   இராஜாங்க அமைச்சர் அமீர் அலி   தலைமையில் இடம்பெற்றது பொது கூட்டம். இவ்விஜயத்தில் போது திட்டமிடல் பணிப்பாளர் நீர்ப்பாசனம் சமன் , மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விவசாய அமைப்புகளின் பிரதிநிதி களுடன் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்துரையாடி போது இவ்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு விவசாய அமைப்புகளின் பங்களிப்பு அவசியமானது  என குறிப்பிட்டார்.

Read More

அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில்…

முந்தனை ஆறு , மூக்கிரையான்ஓடை , விலால் ஓடை அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பது சம்பந்தமான கலந்துரையாடல் இன்று  25.09.2019 மாவட்ட  மாநாட்டு மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பணிப்பாளர் நாயகம் நீர்ப்பாசனம் மோகன்ராஜ், முந்தயன் ஆறு திட்டப்பணிப்பாளர் சமன், பிரதி பணிப்பாளர் நிஹால் ஸ்ரீவர்த்தன, மாவட்ட பணிப்பாளர் அஸ்ஹர், நீர்பாசன  அதிகாரிகளும் மற்றும் கமநல சேவை திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எதிர்வரும் 05.10.2019 ஆம் திகதி இவ் மூன்று…

Read More

தமிழ் மொழி மூல அதிபர் நியமனங்களை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிடம் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் எடுத்துரைப்பு.

அண்மையில் நடாத்தப்பட்ட அதிபர் சேவை தரம் iii க்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்த அனைத்து தமிழ் மொழி மூல தகுதியுடையவர்களுக்கு அதிபர் நியமனங்களை வழங்குமாறு  துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சரிடத்தில் இன்று (25) விடுத்துள்ள கோரிக்கை அடங்கிய மஹஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. அதிபர் சேவை ஆட்சேர்ப்பு பிரமாணக்குறிப்பு மூலமாக உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தெரிவான 160…

Read More