Headlines

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை இடம் பெற்றது

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை இடம் பெற்றது. கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் மீள்குடியேற்ற செயலணி திட்ட அலகு ஊடாக ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா செலவில் இவ் வீதி மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு இன்று (25) புதன் கிழமை இருள் சூழ்ந்த பிரதேசங்களுக்கு…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து (0.46 மில்லியன் ) கதிரைகள் மற்றும் சீமெந்து பொதிகள் வழங்கி வைப்பு

கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை எல்லைக்குற்பட்ட 5 கிராமங்களுக்கான கதிரைகள் மற்றும் சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு உயிலங்குல வட்டார இணைப்பாளர் தயா அவர்களது தலைமையில் இடம்பெற்றது 110000 /= நிதியில் நாகதாழ்வு கிராம மக்களுக்கான சீமெந்து பொதிகள் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்திற்கு 80000/= நிதியில்…

Read More

முத்துநகரில் விவசாயிகளின் ஏர்பூட்டு விழா பெரும்போகம் 2019/2020 அங்குரார்ப்பண நிகழ்வு!

திருகோணமலை உப்புவெளி கமநல சேவைகள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் தகரவெட்டுவான்,முத்துநகர் ஆகிய இரு விவசாய சம்மேளனங்களும் இணைந்து ஏற்பாடு செய்த 2019/2020 ஆண்டுக்கான ஏர்பூட்டு விழா முத்து நகர் விவசாய முன்றலில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று (24) காலை விவசாய சம்மேளனங்களின் பங்கேற்புடன் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து கொண்டு விவசாய சமூகத்துடன் இணைந்து வயல் விதைப்பதற்கான ஆரம்ப…

Read More

கிண்ணியா கற்குழி விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கு திறப்பும் உதைப் பந்தாட்ட இறுதிப் போட்டியும்.

கிண்ணியா கற்குழி விளையாட்டு மைதானத்துக்கான புதிய பார்வையாளர் அரங்கு நேற்று (22)துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் ஜௌபர் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன்பாவா அவர்கள் விசேடமாக கலந்து சிறப்பித்தார். அமைச்சர் றிசாத்…

Read More

மாவடிச்சேனை அல் இக்ரா விளையாட்டுக் கழகம் தலைவர் லத்தீப் தலைமையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் சிநேகபூர்வமான சந்திப்பு

மாவடிச்சேனை அல் இக்ரா விளையாட்டுக் கழகம் தலைவர் லத்தீப் தலைமையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் சிநேகபூர்வமான சந்திப்பு  இடம்பெற்றது. எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக தங்களது அரசியல் பயணத்தில் இணைந்து செயற்படவுள்ளதாக கழகத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சரிடம் உறுதியளித்தார். இக்கலந்துரையாடலில் மாவடிச்சேனை வட்டாரக் குழு தலைவர் சமீம் , இணைப்பாளர் றிஸ்மின், அபிவிருத்தி உத்தியோகத்தர்  மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Read More

தேர்தல் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் உரை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்யும் வேலைத் திட்டத்தினை செய்துள்ளனர் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கும் கோல்ட் உடற்பயிற்சி நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முந்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்….

Read More

புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

இலங்கை துறை முக அதிகாரசபையின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் துறை முக அதிகார சபையின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கான 2019 ம் ஆண்டுக்கான  புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு  (21) சனிக் கிழமை மாலை கொழும்பு துறை முக அதிகார சபையின் மகாபொல பயிற்சி நிறுவனத்தின் மண்டபத்தில் இடம் பெற்றது.   இப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வானது  முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை ,புனர்வாழ்வு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்…

Read More

சிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’

இனவாத சக்திகளின் நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளரை அடையாளப்படுத்தும் நல்லதொரு முடிவை, சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து மேற்கொள்ளுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் அனுசரணையில், தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். வவுனியா மாவட்ட மகளிர் அமைப்பின் அமைப்பாளரும், தையல் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளருமான…

Read More

“சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை” வவுனியாவில் அமைச்சர் றிஷாட்-

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற,நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள்  அனைவரும்  ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் (20) பிரதம விருந்தினராக  அவர் கலந்துகொண்டார் பாடசாலை அதிபர் எஸ்.நிசார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறியதாவது, தேசிய ரீதியில்  பல்வேறு சவால்களுக்கு நாடு முகம்கொடுக்கும் இந்த நெருக்கடியான அரசியல்…

Read More

சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் பம்பலப்பிடியில் அமைச்சர் ரிஷாத் திறந்துவைப்பு

நோலெட்ஜ் மோகன்டைசிங்   நிறுவனத்தின் மற்றும் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் பம்பலப்பிட்டியில் இருக்கும் யுனிட்டி பிளாசாவில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான  ரிஷாத்   பதியுதீனினால்    அவர்களினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி பிரதி அமைச்சருமான  மையோன் முஸ்தபா அவ‌ர்க‌ளி‌ன் பிரசன்னத்துடன் திறந்து வைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின்…

Read More

கிண்ணியாவில் உள்ள சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கலும் LED வீதி மின் விளக்குகள் வழங்கும் நிகழ்வும்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கான  உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இன்று (19) கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற குறித்த சகல விதமான பொருட்களும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிண்ணியாவில் உள்ள சுமார் 15 சங்கங்களுக்கு 13…

Read More

இலங்கை வந்துள்ள இந்திய முதலீட்டாளர்களை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

இந்திய நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Read More