Headlines

முஸ்லிம் பெண்களின் ஹபாயா விவகாரம் தொடர்பில் யாரும் திணிக்க முடியாது- ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அப்துல்லா மஃறூப் எம்.பி

அரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது. இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்ற மாவட்ட  அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில் இங்கு வருகை தந்திருக்கும்…

Read More

அப்துல்லா மஹ்ரூப் எம்.பி விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலக வாழ் முஸ்லிம்கள் தங்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று முழு இறை திருப்தியோடு  பெருநாளை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் என  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அல்குர் ஆன் அருள் பெற்ற மாதம்  , பத்ர் யுத்த தியாக  வெற்றி போன்றவற்றை ஞாபகபடுதுகின்ர இம்மாததில் நாம் செய்கின்ற நற்செயல்களுக்கு பல மடங்கு நன்மைகளை அல்லாஹ் எமக்கு அளிக்கின்றான்…

Read More

அமைச்சர் றிசாத் எவ்வித காரணங்களுக்காகவும் அமைச்சு பதவியை இராஜினமா செய்யமாட்டார்- பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்படத் தெரிவிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எவ்வித காரணங்களுக்காகவும் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உறுதிப்பட தெரிவித்தார். திருகோணமலை உவர் மலை விவேகானந்தா கல்லூரியில் இன்று (02) ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அவர் உரையாற்றுகையில் அமைச்சர் மீதான வீண் பழி சுமத்துவதும் பொய்யான  குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் அவர் மீது கொண்ட…

Read More

கண்டியில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! பதில் பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாத் அவசர வேண்டுகோள்!

கண்டியில் இன்று (03) பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து  நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்கிரம ரத்னவைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் இன்று (03) அதிகாலை மெட்ரோ நியூஸ் இணையத்துக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில், கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று 3 ஆம் திகதி மூடுவதென கண்டி சிங்கள வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், 9.00 மணிக்கு அனைத்து வர்த்தகர்களையும் சிங்கள…

Read More

பயங்கரவாதத்தை ஒழிக்க படையினருடன் இணைந்து முஸ்லிம்கள் போராடும் வேளையில் இனவாத ஊடகங்களால் வேதனையடையந்துள்ளனர் என  -இராஜாங்க அமைச்சர் அமீர்அலி

பயங்கரவாதத்தை ஒழிக்க முழு முஸ்லிம் சமுகமும் இராணுவத்தினருடனும் பொலிசாருடனும் இணைந்து பாரியளவிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் சில இனவாத ஊடகங்களின் செயற்பாடுகளினால் மிகவும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.தயவு  செய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கைகளை இத்தகைய ஊடகங்கள் கைவிடவேண்டுமென விவசாய கிராமிய பொருளாதார அபிவிருத்தி நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று(31) காலை ஓட்டமாவடியிலுள்ள அமைச்சிரின் அலுவலகத்தில் ஊடகவியாலளரிடம் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் இந்த நாட்டு…

Read More

நல்லிணக்கத்திற்கான பாரிய பொறுப்பை சுமந்து பாடுபட ஊடகங்கள் முன்வர வேண்டும் -நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்

மக்களது உள்ளங்களில் இன்றைய சூழ்நிலையில் சந்தேகங்களும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ள நிலையில் சமூகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் பொறுப்பு என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார் . நிந்தவூர் பிரதேச சபையின் 14 ஆவது அமர்வின் போது(வியாழக்கிழமை-30) அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் மற்றும் புத்தி ஜீவிகளுக்கும் எதிராக சில ஊடகங்கள்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பம்!!!

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமாகிய அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்றது. குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (31) காலை இடம் பெற்றது. அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விடயங்கள் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ் நிலைகள் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில்…

Read More

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கொண்டுவரப்பட்டுள்ள சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்ச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவே இதனை நாங்கள் கருதுவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் இன்று (30) மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்தப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சின் முக்கியஸ்தர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான மஹ்ரூப், செயலாளர்…

Read More

நேரடிக்களத்தில் நின்றதற்கா இத்தனை நெருக்குவாரங்கள்?

சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போருக்குள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை யொன்றை சில தீய சக்திகள்,திட்டமிட்டு மாட்டிவிட்டுள்ளன.நாட்டின் வரலாறு நெடுகிலும் சாந்தி,சமாதானத்தை அடியொற்றி வாழும் எமது சமூகத்தின் தலைமைக்கு எதிராக கடும்போக்கு சக்திகளும், மதத்தீவிரமும் ஏற்படுத்தியுள்ள இந்த ஆபத்திலிருந்து நாம் கரையேறுவது எப்போது? இந்தக் கடமையைச் செய்யத் தவறினால் எமது எதிர்கால இளம் சமூகம் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளால் நிர்க்கதியின் விளிம்பில் நிற்க வேண்டிய கதியே ஏற்படப்போகிறது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் கை வைத்து வந்த இந்தக் கடும்போக்குகளுக்கு, அண்மையில்…

Read More

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் உண்மையை கண்டறிய ஒத்துழையுங்கள்!!!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப் தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ஒரு சமூகத்தின் மீதான பழிகளையும் அபாண்டங்களையும் சுமத்துகின்ற சில முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன். இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர்…

Read More

மன்னார் அரிப்பு பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு வாழ்வாதார பொருட்கள்.

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் அரிப்பு கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கான வாழ்வாதார பொருட்கள் மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.  இவ் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்…

Read More

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தின் வீதிப்புனர்நிர்மான பணிகள் ஆரம்பம்…

மன்னார் பிரதேசபை உறுப்பினர் மஹிஷா அவர்களின் வேண்டுகோளின் பெயரில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் வீதிப்புனரமைப்புப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்….

Read More