Headlines

ஞானசார தேரரின் ஆர்ப்பாட்டத்தை தடுக்காவிட்டால் இத் தனி மனிதன் நாட்டையும், சட்டத்தையும் கையிலெடுக்க சந்தர்ப்பமாக அமையும் ; அப்துல்லா மஃறூப். எம்.பி

ஞானசார தேரர் நாட்டை சீர்குழைப்பதற்கே ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்! பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரரும் எதிர்வரும் ஏழாம் திகதி இந்நாட்டை சீர்குழைப்பதற்கும், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார். இதனை தடுக்காவிட்டால் இத் தனி மனிதன் நாட்டையும், சட்டத்தையும் கையிலெடுக்க சந்தர்ப்பமாக அமையும் என திருகோணமலை மாவட்ட   நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஃறூப் தெரிவித்தார் கந்தளாயில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் திறப்பு விழாவும் அங்குரார்ப்பண நிகழ்வு…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கந்தளாவில் அபிவிருத்தி பணிகள் அங்குரார்ப்பண நிகழ்வும் திறப்பு விழாவும்..

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திறப்பு விழா நிகழ்வும் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம் பெற்றுள்ளது குறித்த அபிவிருத்தி நிகழ்வு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று (30) இடம் பெற்றன. பேராறு இரண்டாம் கொலனி முகைதீன் ஜூம்ஆ பள்ளியின் சுற்று மதில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது அஸ்சபா பாடசாலை வீதி சுமார் பத்து…

Read More

வீதி அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்துவைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் பேராசியர் இஸ்மாயில்….

சம்மாந்துறையிலுள்ள பல வீதிகள் சீரற்று காணப்படுகின்ற அவலம் செந்நெல் கிராமம் மற்றும் மலையடிக் கிராமம் போன்ற பிரதேசங்களில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் கௌரவ பராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களிடம் முறைப்பாடு செய்திருந்தனர். அதற்கமைவாக அம்பாறை – 12 ஏ வீதியில் வசிக்கின்ற மக்களில் சிலர் இன்று பாராளுமன்ற உறுப்பினரை நாடி தங்களது வீதியின் அவல நிலை குறித்து கலந்துரையாடிய பின்னர் அவ் வீதிக்கான கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணியை கம்பெரலிய வேலைத் திட்டத்தினூடாக துரித…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கந்தளாய் பிரதேச மத்திய குழு தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கந்தளாய் பேராரு மேற்கு   பிரதேசத்துக்கான மத்திய குழு தெரிவு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்றது. கட்சியின் தொண்டர்களைக் கொண்ட இக் குழுவானது இன்று (30)  கந்தளாய் ஆயிஸா வித்தியாலயத்தின் மண்டபத்தில் இடம் பெற்ற மத்திய குழு தெரிவில் பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன. எதிர்கால நடவடிக்கைகள் யாவும் இவ் மத்திய குழு ஊடாக கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அபிவிருத்திகள் உட்பட…

Read More

பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கியவன் நான்தான்!- ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன் சாட்சியம்

கடந்த ஆண்டு அக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்க்ஷ அணியில் இணைந்துகொள்ள எனக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை நான் மறுத்தேன். அந்த கோபதாபங்களின் காரணமாகவே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு என்னை ஸஹ்ரானுடன் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். நானோ எனது குடும்பத்தினரோ பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபடவில்லை. நான் ஸஹ்ரானை பார்த்தது கூட இல்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கூறினார், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு…

Read More

அரபு மொழி பலகை அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்கள், பாடசாலைகள், அரபு கலாசாலைகளில் அரபு மொழி பலகை அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கல்குடா பிரதேசத்தின் காணப்படும் அரபு வாசகங்களை அகற்றுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, நாவலடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பிரதேசத்தில் காணப்படும் பள்ளிவாயல்கள், மதரசாக்களில் உள்ள அரபு மொழியிலான பெயர்…

Read More

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டு மன்னார் பெரியகடை கடற்கரை மற்றும் அணைக்கட்டு வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்….

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களது கம்பெரேலிய திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து பெரியகடை நகரத்திற்கான கொங்கிரீட் பாதை மற்றும் அணைக்கட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. ரூபாய் 1.6 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதை மற்றும் அணைக்கட்டு திறந்துவைக்கும் நிகழ்வானது மன்னார் நகர சபை வேற்பாளர் அன்டன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து…

Read More

‘ சஹ்ரானை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை – ஐ எஸ் அமைப்பை அரசு இல்லாதொழிக்க வேண்டும் ” – தெரிவுக்குழு முன் ரிஷாட் பதியுதீன் !

ஆர். சிவராஜா- ”வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலை தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை.இவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது. நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன். அந்த அமைப்பை ஒழிக்கஅரசாங்கம் செயல்பட வேண்டும் ” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்சாட்சியங்களை அளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். கே. – ச.தொ.ச வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள்உள்ளனவா? ப. –…

Read More

அவசரகாலச் சட்டத்தின் கீழ் காரணமின்றி கைதானோர் விடுவிக்கப்பட வேண்டும்!

எவ்வித காரணமும் இன்றி அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். தாக்குதல்களால் சேதமடைந்த பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள், உடமைகளுக்கான நஷ்டஈடுகளை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வலியுறுத்தினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அவசர காலச்சட்டம்…

Read More

தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம்.

வடகிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 380 ஆசிரியர்களும் வடக்கு மாகாணத்தில் 380 ஆசிரியர்களும் மொத்தமாக 1119 ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொண்டார்கள் குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க , கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்மந்தன், அப்துல்லா மஃறூப், மாவை சேனாதிராஜா, எம்.எஸ்.தௌபீக்,…

Read More

தம்பலகம பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்துக்கார அங்குரார்ப்பண நிகழ்வு

திருகோணமலை மாவட்டம் தம்பலகம பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (27) வியாழக் கிழமை தம்பலகம பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது. குறித்த கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நட்டு வைத்தார். சுமார் 90 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கட்டிடம் பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக அமையப்பெறவுள்ளது இதன் போது வைத்தியசாலையின் வளாகத்தினுள் நிர்மாணிக்கப்படவுள்ள மேலும் ஒரு சிறுவர் பூங்காவினையும் பிரதமர் அங்குரார்ப்பணம் செய்து…

Read More

எந்தச் சவாலுக்கும் முகங் கொடுத்து வெற்றியடைய வேண்டும்: அப்துல்லா மஃறூப் எம்.பி.

கடந்த கால யுத்த சூழ் நிலையின் போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றி நியமனங்களை பெற்றிருப்பது அவர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். வடகிழக்கில் தொண்டராசிரியர்களாக பணியாற்றி வந்த சுமார் 1119 ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட வடகிழக்கு…

Read More