Headlines

புத்தள மாவட்ட மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று(08) நடைபெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடானான சந்திப்பில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதேச அமைப்பாளர்கள் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Read More

கிண்ணியா உப்பாறு கடலில் வல்லம் குடை சாய்ந்ததில் ஒருவர் பலி ,இருவரை காணவில்லை,இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு _மீட்புப் பணியில் படையினர்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடலில் இன்று (08) வல்லம் குடை சாய்ந்ததில் ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது அதிகாலையில் வெள்ளம் காரணமாக தங்களது விவசாய செய்கைக்காக வல்லத்தில் சென்ற வேலையில் வல்லம் குடை சாய்ந்ததில் ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  இருவர் காப்பாற்றப்பட்டு கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  தற்போது மீட்புப் பணியில் கடற்படையினருடன் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டுவருவதாகவும்…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் – ஜனாதிபதி கோட்டாவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை

அதிமேதகு ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01. அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, வில்பத்து சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்தல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள தங்களுக்கு முதலாவதாக, எனது மற்றும் என்னை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியின்…

Read More

இனவாதமும்மதவாதமும் தொடர்ந்தும் இந்த நாட்டை ஆட்டிப்படைக்க முடியாது புல்மோட்டையில் ரிஷாத்

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும், அதனை சரி செய்து மீண்டும்  மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம்  என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் இன்று காலை (01) இடம்பெற்ற பொதுமக்கள் ,ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம் வெற்றிகரமாக இடம்பெற்ற போதும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சகல இனங்களையும் சமனாக மதிக்கின்ற, சமத்துவத்தை பேணுகின்ற, சிறுபான்மை…

Read More

நீதியும், நியாயமும் உயிர்வாழுமேயானால் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது -வவுனியாவில் ரிஷாத் பதியுதீன்

நீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனை வழங்க முடியாதெனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். சிங்கள இலத்திரனிய ஊடகங்களில் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக அபாண்டங்களை பரப்பினாலும் உண்மைகளை பொய்யாக்கி விட முடியாதெனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். வவுனியா சின்னசிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று (30) இடம்பெற்ற போது.பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள்…

Read More

பலமான சக்தியாக மீண்டெழுவோம். மன்னாரில் றிஷாட்.

சிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மன்னாரில் பலகிராமங்களுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். ஆட்சியை தொடங்கிய குறுகிய காலத்தில் அராஜகம் தொடங்கியுள்ளது.புத்தளம் கனமூலைக்கு மக்களை சந்திக்க சென்றபோது…

Read More

மக்களாணையை  மதித்தே பதவி விலகுகின்றோம்  – மீண்டும் அமைச்சு பதவியை கோருவதாக கூறப்படுவது பொய் பிரச்சாரம் ;  ரிஷாத் பதியுதீன் – எம்.பி

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கப்பெற்ற  மக்களாணையை  மதித்து அமைச்சு பதவிலிருந்து தாம் விலகுவதாகவும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சு ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு, இன்று காலை (21) இடம்பெற்ற போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சின் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், அவர்…

Read More

இதயபூர்வமான நன்றிகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளையேற்று சஜித் பிரேமதசவுக்கு வாக்களித்த சகோதரர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம். வாக்காளர்களாகிய உங்களுடனான எமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென உறுதியளிக்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஐபக்ஷவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் ரிஷாட் பதியுதீன் (பா உ) அமைச்சர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்

Read More

மன்னாருக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு.

மன்னாருக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு. ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்கள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையை பயன்படுத்துவதை தவிர்க்கவும். வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இனவாதிகளினால் பல்வேறு தடங்கல்கள் நடவடிக்கைகள் அப்பாதையில் இடம்பெறுவதனால் மாற்று பாதையை பயன்படுத்துங்கள்.

Read More

சாய்ந்தமருது பள்ளிவாசல் தனது முடிவை மாற்றி அறிக்கையிட முன்வர வேண்டும். அமைச்சர் றிசாட் பகிரங்க அழைப்பு!!!

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையையும் சுய கெளரவத்தினையும் பலப்படுத்த சாய்ந்தமருது பள்ளிவாசல் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எடுத்துள்ள முடிவினை மாற்றி மீள் அறிக்கையிட முன்வரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் பகிரங்க அழைப்பு விடுத்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் நெடா நிறுவனத்தின் தவிசாளருமான சிறாஸ் மீராசாஹிப் தலைமையில் புதன் கிழமை மாலை…

Read More

மீராவோடை மேற்கு வட்டாரக் குழு தலைவர் றிஸ்வின் தலைமையில் மகளிர்களுக்கான கருத்தரங்கு.

மீராவோடை மேற்கு வட்டாரக் குழு தலைவர் றிஸ்வின் தலைமையில்  நேற்று  (13) மகளிர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் முன்னாள் தவிசாளர் ஹமீட், பிரதேச சபை உறுப்பினர்களான ஜெஸ்மின், ஜெமிலா, நபீரா , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பாயிஷா, மத்திய குழு செயலாளர் அக்பர் ,  மக்கள் சக்தி தலைவர் றபீக், மக்கள் சக்தி தலைவர்…

Read More

அண்ணன் தம்பிமார்களே கொடூரமான ஆட்சியை முன்னரும் நடாத்தினார்களே மீண்டும் அதிகார மோகமா??

கடந்த மஹிந்த ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் அண்ணன் மஹிந்த கோத்தபாய பஷில்ராஜபக்ஸ போன்றோர்களே நாட்டை கொடூரமான ஆட்சிக்கு இட்டுச் சென்றுள்ளார்கள் மீண்டும் இவர்களுக்கு ஏன் இந்த அதிகார மோகம் பிடித்துள்ளது . பொருளாதார ரீதியாகவும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் நாசமாக்கிய அண்ணன் ,தம்பிகளுக்கு மீண்டும் வாக்களித்து நாட்டை கொடுக்க முடியாது என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார் தோப்பூரில் இன்று (13) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில்…

Read More